நடிகை ரேகா நாயர் கார் மோதி ஒருவர் பலி.. கைதாக வாய்ப்பா? 

  • IndiaGlitz, [Wednesday,August 28 2024]

நடிகை ரேகா நாயர் கார் மோதியதால் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் அவர் கைதாக வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ரேகா நாயரிடம் விசாரணை செய்தபோது, ‘காரை தான் ஓட்டி செல்லவில்லை என்றும் தனது கார் ஓட்டுநர் பாண்டி என்பவர் தான் காரை ஓட்டிச் சென்றார் என்றும் மெக்கானிக் கடையிலிருந்து வீட்டிற்கு காரை கொண்டு வரும்போது தான் இந்த விபத்து நடந்திருக்கிறது என்றும் நான் அவருக்கு முன்னரே இருசக்கர வாகனத்தில் சென்றேன்’ என்றும் ரேகா நாயர் கூறியுள்ளார்..

மேலும் விபத்து நிகழ்ந்த உடன் பொதுமக்கள் கூடியதால் அதை கண்டு இறங்கி பார்த்த போது தான் ஒருவர் படுகாயம் அடைந்தது தெரிய வந்தது என்றும் இறந்த நபர் மது போதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளார் என்றும் ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.

சிசிடிவி காட்சியை பார்த்தால் தான் எப்படி விழுந்தார் என்பது குறித்து தெரிய வரும் என்றும் நான் காரை ஓட்டவில்லை எனது ஓட்டுநர் தான் காரை ஓட்டினார் அதற்கான ஆதாரங்களை போலீசாரிடம் அளித்துள்ளேன் என்றும் இந்த விபத்து குறித்து ரேகா நாயர் கூறியுள்ளார்

இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது எம்.ஜி.ஆர் நகர் டி.வி.கே தெருவை சேர்ந்த பாண்டி என்ற டிரைவர் என்பதும், இவர் நடிகை ரேகா நாயரிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்ததாக கூறப்படுகிறாது. இதையடுத்து பாண்டி கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

More News

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் இணையும் மகன் யாத்ரா.. என்ன செய்ய போகிறார்?

தனுஷ் இயக்கத்தில் உருவான ராயன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

ப்ரியா அட்லி ஆரம்பிக்க போவது இதுதான்.. ஆகஸ்ட் 30 முதல் நெட்டிசன்களுக்கு விருந்து?

பிரபல இயக்குனர் அட்லி மனைவி ப்ரியா அட்லி விரைவில் ஒரு புதிய அம்சத்தை ஆரம்பிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் அது என்னவாக இருக்கும்? புதிய தொழில்

'விடாமுயற்சி' 'குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதிகள் மாறுகிறதா? அஜித் ரசிகர்கள் அதிருப்தி..!

அஜித் நடித்த 'விடாமுயற்சி' திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்றும் 'குட் பேட் அக்லி' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்

அரெஸ்ட் பண்ணிருவேன்னு மிரட்டினாங்க.. பிக்பாஸ் சனம் ஷெட்டி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!

பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் நடிகை சனம் ஷெட்டி இன்று காலையில் தனக்கு நேர்ந்த ஒரு அதிர்ச்சி அனுபவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'த்ரிஷ்யம்' நடிகை ஆஷா சரத்துக்கும் பாலியல் தொல்லையா? வழக்கு போடுவேன் என மிரட்டல்..!

பிரபல மலையாள நடிகர் சித்திக் மீது சில நடிகைகள் பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் 'த்ரிஷ்யம்' நடிகையும் பாலியல் துன்பத்திற்கு ஆளாகியதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தியால் பரபரப்பு