சமந்தாவை தொடர்ந்து இளம் நடிகையின் புது முயற்சி… வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,November 08 2021]

சமீபத்தில் நடிகை சமந்தா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கலை வழியாக புத்துணர்ச்சி மற்றும் நம்பிக்கை அளிக்கும் வகையிலான ஓவியம் வரைவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவரும் நடிகை ரெஜினா காசண்ட்ரா தற்போது ஓவியம் வரைவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். மேலும் இதுகுறித்து “கலை குணமாகும் என்றால் கலைஞர் குணப்படுத்துபவர்“ என்ற கேப்ஷனுடன் சில புகைப்படங்களையும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

9 வயதில் தொகுப்பாளினியாக பணியாற்றத் தொடங்கிய ரெஜினா பின்பு குறும்படங்களில் நடித்து பிரபலமானார். பின்னர் கன்னட சினிமாவில் அறிமுகமான அவர் 16 வயதில் “கண்டநாள்முதல்“ திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிக்கத் துவங்கினார். அடுத்து “அழகிய அசுரா”, “ராஜதந்திரம்“, “பஞ்சாமிர்தம்“ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

ஆனால் நடிகர் சிவகார்த்திகேயனுடன் “கேடி பில்லா கில்லாடி ரங்கா“ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானதும் குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு எனப் பல மொழிகளில் பிசியான நடிகையாக வலம்வரும் ரெஜினா, தற்போது ஓவியராக மாறியிருக்கிறார். இதுகுறித்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.