நடிகை ரீமாசென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா? செம வைரலாகும் புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,July 08 2022]

விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை ரீமாசென் தனது மகனுடன் எடுத்த புகைப்படத்தை சற்றுமுன் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் நடிகை ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா? என்று ஆச்சரியத்தில் ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

கௌதம் மேனன் இயக்கிய ’மின்னலே’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ரீமாசென், அதன்பின் தளபதி விஜய்யின் ‘பகவதி’ விஷாலின் ’செல்லமே’ செல்வராகவனின் ’ஆயிரத்தில் ஒருவன்’ உள்பட பல படங்களில் நடித்தார்.

கடந்த 2012ஆம் ஆண்டு தொழில் அதிபர் ஷிவ் கரண் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரீமா சென்னுக்கு ருத்ரவீர் என்ற மகன் உள்ளார். அவ்வப்போது தனது மகனின் புகைப்படங்களை பதிவு செய்து வரும் ரீமான்சென் சற்று முன்னர் தனது மகனை கட்டிப் பிடித்தவாறு இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரீமாசென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சரியத்தில் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அவர் ஹீரோவாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தொடர்கிறது ரம்யா பாண்டியனின் 'மூன்லைட்' போட்டோஷூட்: செம கிளாமர் என ரசிகர்கள் கமெண்ட்ஸ்!

நடிகை ரம்யா பாண்டியன் கடந்த சில நாட்களாக மூன்லைட் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

கமல்ஹாசனுக்கு பெரியார்-அம்பேத்கர் சிலைகளை பரிசாக வழங்கிய போனிகபூர் படக்குழு: எதற்கு தெரியுமா?

உலக நாயகன் கமலஹாசனுக்கு பெரியார், அம்பேத்கர் சிலைகளை போனிகபூர் தயாரித்த படத்தின் குழுவினர் வழங்கிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஒரு நிமிஷம் அப்பாவ நினைச்சுக்கோ, தைரியம் தானா வரும்: சூர்யாவின் அடுத்த பட டிரைலர்

சாய்பல்லவி நடிப்பில் உருவான 'கார்கி' என்ற படத்தின் தமிழக திரையரங்கு ரிலீஸ் உரிமையை சூர்யாவின் 2டி நிறுவனம் பெற்றுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சூரியின் சொத்துமதிப்பு இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் கோலிவுட் திரையுலகம்!

நடிகர் சூரியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் சமூக வலைதளங்களில் கசிந்துள்ள நிலையில் அவருக்கு இத்தனை கோடி சொத்தா? என திரையுலகினர் ஆச்சரியத்தில் உள்ளனர்.

கணவர் இறந்த ஒரே வாரத்தில் படப்பிடிப்புக்கு வந்துவிட்டாரா மீனா?

நடிகை மீனாவின் கணவர் இறந்து ஒரு வாரம் மட்டுமே ஆகிய நிலையில் தற்போது அவர் மீண்டும் படப்பிடிப்புக்கு வந்து விட்டதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.