பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சி எப்படி இருந்தது.. நடிகை ராஷ்மிகா மந்தனா கூறிய முக்கிய தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,May 15 2024]

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட்டிலும் பிஸியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சி குறித்து சமீபத்தில் அவர் பேட்டி அளித்த போது தனது கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.

மும்பை - நவிமும்பை நகரங்களை இணைக்கும் நாட்டின் மிக நீளமான அடல் சேது கடல்வழி பாலம் சாத்தியம் என்று யாராவது நாம் நினைத்திருப்போமா? ஆனால் மோடியின் ஆட்சியில் சாத்தியமாகியுள்ளது. இந்த பாலம் மூலம் 2 மணி நேர பயணம் 20 நிமிட பயணமாக மாறி உள்ளது என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். இது போன்ற உள்கட்டமைப்பு வசதிகளால் தான் நம்மால் எளிமையாக பயணம் செய்ய முடிகிறது என்றும் இது எனக்கு பெருமை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் நாடு அபரிதமான வளர்ச்சி அடைந்துள்ளது, உள்கட்டமைப்பு சார்ந்த திட்டமிடல் அபாரமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா இளம் தலைமுறை கொண்ட நாடு என்பதால் வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் இளம் தலைமுறையினர் அதிகம் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு தற்போது பொறுப்பு உள்ளது என்றும், சரியான திசையில் அவர்கள் பயணம் செய்து வருகிறார்கள் என்றும், இந்த வளர்ச்சியோடு நிற்காமல் இன்னும் அதிக வளர்ச்சியடைய மோடிக்கு வாக்களியுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

More News

2047ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக்க இதுவே வழி - VIT விஸ்வநாதன் அறிவுரை

நிறுவனங்களுடன் கூடி மாணவர்கள் திறன் மேம்பாடு செய்வதிலும் விஐடி-யின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் முன்னோடியாக இருந்து செயல்பட்டு வருகிறார்” என்று பிங்காம்டன் பல்கலைக்கழகத் தலைவர் ஹார்வி ஸ்டெங்கர் கூறினார்.

குடும்ப தொழில் முறையை அடுத்த தலைமுறையும் எடுத்து நடத்துவதே ஆகசிறந்தது -மாதம்பட்டி ரங்கராஜ்

சவுக்கு கட்டை ,விறகு ,அடுப்பு ,நெருப்பு ,வியர்வை மற்றும் சமையல் இது எல்லாமே என்னுடன் எனக்குள் இணைந்த ஒன்று ஆகும்.எனது அப்பா சமைக்கும் காலத்தில் ஆரம்பத்திலேயே விறகில் தான் சமைத்தார்...

டிவி தொகுப்பாளினியை தீர்த்தம் கொடுத்து ஏமாற்றிய பூசாரி..   போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

டிவி தொகுப்பாளனி மற்றும் நடிகையை தீர்த்தம் கொடுத்து பூசாரி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வாரம் எத்தனை தமிழ் திரைப்படங்கள்? ஓடிடி ரிலீஸ் குறித்த முழு தகவல்கள்..!

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது போலவே ஓடிடியில் ஏற்கனவே ரிலீசான படங்கள் மற்றும் புதிய வெப் தொடர்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன

விவாகரத்து குறித்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. ஜிவி பிரகாஷின் வருத்தமான பதிவு..!

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் பரஸ்பரம் பிரிவதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக