படப்பிடிப்பின்போது பாலியல் தொல்லை: நடிகர் சண்முகராஜன் மீது பிரபல நடிகை புகார்

  • IndiaGlitz, [Monday,October 15 2018]

கடந்த சில மாதங்களாக நடிகைகள் உள்பட திரையுலகினர் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தைரியமாக வெளியே கூறி வருகின்றனர். இதனால் பாலியல் தொல்லை கொடுப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இன்னும் ஒருசில இடங்களில் மட்டும் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை செங்குன்றத்தில் படபிடிப்பின் போது தொலைகாட்சி தொடரில் நடித்து வரும் பிரபல நடிகை ராணி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல தமிழ் நடிகர் சண்முகராஜன் மீது செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

நடிகை ராணி, ராமராஜன் நடித்த 'வில்லுப்பாட்டுக்காரன்' உள்பட பல படங்களில் நடித்தவர் என்பதும், நடிகர் சண்முகராஜன், 'கமல்ஹாசன் நடித்த 'விருமாண்டி' உள்பட பல படங்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'தேவர் மகன் 2' சாதியை எதிர்க்கும் படமா? கமல் பதில்

'தேவர்மகன்2' அனைத்து சாதியினருக்கும் எதிரான படம்”என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சபரிமலைக்கு பெண்கள் சென்றால் கூட்டுத்தற்கொலை: சிவசேனா மிரட்டல்

சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று ஐயப்பனை வழிபடலாம் என சுப்ரீம் கோர்ட் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியது.

14 ஆண்டுகள் கழித்து சின்மயிக்கு பயம் போனது எப்படி? சீமான் கேள்வி

வைரமுத்து விவகாரம் குறித்து 14 ஆண்டுகள் கழித்து சின்மயி பேசியதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

கேரளாவுக்குள் நுழைய கூடாது: பேராயர் பிராங்கோவுக்கு நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக பேராயர் பிராங்கோ என்பவர் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.

சின்மயி தைரியத்தை பாராட்டுகிறேன்: சரத்குமார்

பாடலாசிரியர் வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து ஆரம்பத்தில் திரையுலகினர் கருத்து சொல்லாமல் மெளனமாக இருந்த நிலையில் தற்போது கருத்து சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.