ரகசியத் திருமணம் செய்து கொண்டேனா? கொந்தளித்த முன்னணி நடிகை!

தமிழ், தெலுங்கு, இந்தி எனப்பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலரை ரகசியத் திருமணம் செய்துகொண்டதாக வதந்தி பரவியதை அடுத்து கோபம் அடைந்து பதிலளித்துள்ளார்.

தமிழில் “என்ஜிகே“, “தீரன் அதிகாரம் ஒன்று“ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் ஏற்கனவே தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்துவந்த நிலையில் தற்போது இந்தி சினிமாக்களில் எட்டுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியைக் காதலிப்பதாக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து தற்போது சினிமாக்களில் பிசியாக நடித்துவரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், ரகசியத் திருமணம் செய்துகொண்டதாக வதந்தி பரவியது. இதனால் கோபமடைந்த அவர், “நான் வெளிப்படையானவள். என்னுடைய காதலை பகிரங்கமாக அறிவித்தது போல் திருமணத்தையும் அறிவிப்பேன். அந்த துணிச்சல் என்னிடம் இருக்கிறது. மேலும் 10க்கும் மேற்பட்ட படங்களில் நான் தற்போது நடித்து வருகிறேன். இதுபோன்ற முட்டாள்தனமான வதந்திகளை நான் பெரிதுப்படுத்துவதில்லை“ என்று தெரிவித்து உள்ளார்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் இந்தப் பதிலைத் தொடர்ந்து ரசிகர்கள் சிலர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். நடிகை ரகுல் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள “அயலான்“ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு திரைப்படமான “அக்டோபர் 31 டேடீஸ் நைட்“ எனும் திரைப்படத்திலும் நடித்து முடித்திருகிறார்.

அதேபோல “ரன்வே 34“, “தேங்க் காட்“, “டாக்டர் ஜி“, “மிஷன் சிண்ட்ரெல்லா என எட்டுக்கும் மேற்பட்ட இந்தி படங்களில் அவர் நடித்து வருகிறார். தற்போது திருமணம் பற்றிய வதந்தி கிளம்பிய நிலையில் “என்னை தொந்தரவு செய்யாதீர்கள்.. என்னுடைய முழுக்கவனமும் இப்போது என் தொழில் மீதுதான் இருக்கிறது“ எனப் பதில் அளித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

இந்திய அணியின் தோல்விக்கு இதுவே காரணம்… விளாசும் முன்னாள் வீரர்கள்!

ஜோகனஸ்பர்க்கில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் படு சொதப்பலாக விளையாடி 7 விக்கெட்

பிக்பாஸ் கூறியதால் பிரியங்காவை வீட்டை விட்டு விரட்டும் ராஜூ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 95வது நாளான நேற்று சிபி 12 லட்சம் ரூபாய் பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறினார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று ஒருவரை நேரடியாக இறுதிப் போட்டிக்கு அழைத்துச்

நொறுங்கிபோன இந்தியக் கோட்டை… அடுத்த போட்டியில் கோலி விளையாடுவாரா?

இந்தியக் கிரிக்கெட் அணி இதுவரை ஜோகனஸ்பர்க்கில் தோல்வியைத் தழுவியதே இல்லை

மகேஷ்பாபுவை அடுத்து இன்னொரு திரையுலக பிரபலத்திற்கு கொரோனா தொற்று!

பிரபல நடிகர் மகேஷ்பாபு நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு திரையுலக பிரபலத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஜெயம் ரவி - தன்யா ரவிச்சந்திரன் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை!

நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை தன்யா ரவிச்சந்திரன் நடித்துவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இன்னொரு பிரபல நடிகை இணைந்துள்ளதாக