நேரில் தாக்கும் எதிரிக்கு பயப்பட வேண்டாம், புகழ்ந்து பேசும் நண்பனுக்கு பயப்படுங்கள்: ராதிகா

நேரில் தாக்கும் எதிரிக்கு பயப்பட வேண்டாம், புகழ்ந்து பேசும் நண்பனுக்கு பயப்படுங்கள்: ராதிகா.

பாரதிராஜாவின் ’கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தில் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நடிகை ராதிகா, சமீபத்தில் திரையுலகில் 42 ஆண்டுகள்’ என்ற மைல்கல்லை எட்டினார். ஒரு நடிகர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் நிலைத்திருப்பது சாதாரணமான ஒன்றே. ஆனால் ஒரு நடிகை 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதிலும் முன்னணி வேடத்தில் நடிப்பது என்பது உண்மையில் ஒரு பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை ராதிகா தனது சமூக வலைத்தளத்தில், ‘எதிரிகள் உங்களைத் தாக்குவதைப் பற்றி பயப்பட வேண்டாம், ஆனால் உங்களைப் புகழ்ந்து பேசும் நண்பர்களிடம் பயந்தே இருங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அமெரிக்க எழுத்தாளர் மற்றும் தத்துவஞானியான டேல் கார்னகி, அவர்கள் இளைஞர்களுக்கு தெரிவித்த இந்த கருத்தை தற்போது ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ராதிகா திடீரென இந்த பதிவை ஏன் பதிவு செய்தார் என்பது தெரியவில்லை என்றாலும் இதில் உள்ள கருத்து எக்காலத்துக்கும் பொருந்துவதாக இருப்பதாக நெட்டிசன்கள் புகழாராம் சூட்டி வருகின்றனர்.

More News

'பிக்பாஸ் தமிழ்' டைட்டில் வின்னர் ஆரவ்வுக்கு திருமணம்: மணப்பெண் நடிகையா?

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் டைட்டின் வின்னரான ஆரவ்வுக்கு திருமணம் என்ற செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகிறது

விஜய் உறவினர் சினேகா பிரிட்டோவின் திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல்

தளபதி விஜய்யின் மாமா மகளும் விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவுக்கும், நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷுக்கும்

சென்னை மாணவி லண்டனில் கடத்தப்பட்ட விவகாரம்!!! NIA விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!!

சென்னை ராயப்பேட்டையைச் சார்ந்த தொழிலாளர் ஒருவரின் மகள் லண்டனில் உயர்கல்வி பயின்று வந்தார்

வீடு முழுவதும் தகரத்தை வைத்துமூடி அத்துமீறல்… கொரோனா சிகிச்சை எடுத்துக் கொண்டதால் புறக்கணிப்பு!!!

சென்னை பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை பகுதியில் கொரோனா பாதித்த ஒருவரின் வீட்டுக் கதவு,

பார்சிலோனா அணியிலிருந்து விலக மெஸ்ஸி முடிவு: படு தோல்வி காரணமா?

கடந்த 20 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் உலகின் முன்னணி கால்பந்து வீரராக மெஸ்சி திடீரென பார்சிலோனா அணியிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாக