தோல்வி என்றாலும் அரசியல் பயணம் தொடரும்.. நடிகை ராதிகா தெரிவித்த நன்றி..!

  • IndiaGlitz, [Tuesday,June 04 2024]

நடிகை ராதிகா விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்ற நிலையில் தோல்வி அடைந்தாலும் தனது சமூகப் பணி மற்றும் மக்கள் நல பணி தொடரும் என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் சற்றுமுன் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்

நடிகர் ராதிகா மற்றும் விஜய பிரபாகரன் ஆகிய இரண்டு பிரபலங்களும் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் இருவருமே தோல்வியை தழுவி தழுவியுள்ளனர். இந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் அபார வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் தோல்வி அடைந்த நடிகை ராதிகா சரத்குமார், தோல்வி அடைந்தாலும் தனது சமூக நல பணி மற்றும் மக்கள் நல பணி தொடரும் என்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

எனது அரசியல் பயணத்தில் நான் முதன்முறையாக விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் 2024 - இல் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தல் களம் கண்டதில், எனக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

விருதுநகர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது தெரிவித்தது போல, மக்களுக்கான எனது செயல்பாடும், சமூக பணியும், மக்கள் நல பணியும் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.