கடை திறப்பு விழாவுக்கு சென்ற நடிகை பிரியங்கா மோகன் காயம்: என்ன நடந்தது?

  • IndiaGlitz, [Thursday,October 03 2024]

நடிகை பிரியங்கா மோகன் கடைத் திறப்பு விழாவுக்கு சென்ற நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டதாக வெளிவந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரை உலகில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன், அதன் பின்னர் எதற்கும் துணிந்தவன் மற்றும் கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது, அவர் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அவ்வப்போது கடைத் திறப்பு விழாவுக்கு செல்லும் நடிகை பிரியங்கா மோகன், தெலுங்கானாவில் உள்ள கடைத் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்த நிலையில், திடீரென மேடை சரிந்து விழுந்ததால் கூட்ட நெரிச லுக்கிடையே அவர் கீழே விழுந்தார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

இந்த சம்பவத்தில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இன்றைக்கு நடந்த சிறு விபத்தில், சிறிய காயங்களுடன் உயிர் தப்பினேன். தற்போது நான் நலமாக இருக்கிறேன் என்பதை எனது ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். அவர்கள் எனக்கு கொடுத்த அன்புக்கும் அக்கரைக்கு மிகவும் நன்றி, என்று அவர் தெரிவித்துள்ளார்.

More News

'தளபதி 69' படத்தில் இணைந்த இன்னொரு பிரபலம்.. குவியும் அப்டேட்கள்..!

விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான 'தளபதி 69' படத்தின் அப்டேட்டுகள் கடந்த சில நாட்களாக வெளிவந்து, ரசிகர்களை திகைக்க வைக்கின்றன. அப்டேட் மேல் அப்டேட் வெளியாகி

தளபதி 69' படத்தில் இன்னொரு ட்விஸ்ட்.. 3வது நாயகி குறித்த அறிவிப்பு..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன

நயன்தாரா படத்தை அடுத்து நேரடி ஓடிடிக்கு வருகிறதா கமல்ஹாசன் படம்?

நடிகை நயன்தாரா நடித்து வரும் 'டெஸ்ட்' என்ற திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்திற்கு வர இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது கமல்ஹாசனின் அடுத்த படமும்

சமந்தா விவகாரத்தில் ஆவேசமான அமலா.. ராகுல் காந்திக்கு முக்கிய கோரிக்கை..!

சமந்தா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை அமலா, ராகுல் காந்திக்கு கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாய் தவறி பேசிவிட்டேன்.. ஆனால் நான் சொன்னது உண்மைதான்: சமந்தா குறித்து அமைச்சர் சுரேகா..!

சமந்தா விவாகரத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தெலுங்கானா அமைச்சர் சுரேகா முன்னாள் அமைச்சர் கேடிஆர் குறித்து நான் கூறியது உண்மைதான் என்றும்