வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைக்கு தாயான பிரபல பாலிவுட் நடிகை!

பாலிவுட் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக கொடிக்கட்டி பறந்துவரும் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, ஐபிஎல் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இருந்துவருகிறார். அவர் தற்போது வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு தாயான விஷயத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய “தில் சே“ படத்தில் அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இந்தப் படம் தமிழில் “உயிரே“ என்ற பெயரில் வெளியாகி பெரிய அளவில் வெற்றிப்பெற்றது. அதைத்தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ப்ரீத்தி ஜிந்தா கிரிக்கெட்டிலும் ஆர்வம் காட்டிவந்தார்.

அந்த வகையில் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவராக இருப்பதோடு அந்த அணியின் நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார். கூடவே பாலிவுட் சினிமாவில் கவுரவத் தோற்றத்திலும் அவ்வபோது நடித்து வருகிறார். இதையடுத்து நடிகை ப்ரீத்தி ஜிந்தா கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தனது நீண்டகால நண்பர் Gene Goodenough என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் 46 வயதான நடிகை ப்ரீத்தி ஜிந்தா தற்போது வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுள்ளார். இதனால் அவரது கணவர் Gene Goodenough யும் தானும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகத் தெரிவித்த அவர் தங்களது குழந்தைகளுக்கு ஜெய் ஜிந்தா குட், ஜியா ஜிந்தா குட் எனப் பெயர் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதை அடுத்து ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More News

'ஜெய்பீம்' விவகாரம்: சந்தானம் தெரிவித்த அதே கருத்தை கூறிய சீமான்!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் ஒரு பக்கம் மிகப்பெரிய வெற்றிபெற்ற போதிலும் இன்னொரு பக்கம் இந்த படத்திற்கு சில சர்ச்சைகளும் எழுந்தன என்பதும் குறிப்பாக பாமக கட்சியை சேர்ந்தவர்கள்

'சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் அப்டேட்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்' இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது

மோகன்லாலின் மெகா பட்ஜெட் படத்தை தமிழில் ரிலீஸ் செய்யும் கலைப்புலி எஸ். தாணு

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மெகா பட்ஜெட் திரைப்படத்தை தமிழில் கலைபுலி எஸ் தாணு அவர்கள் ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவர் மாட்டுச் சாணம் சாப்பிடும் வீடியோ… அதிர்ச்சியில் நெட்டிசன்ஸ்!

ஹரியாணாவைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் வீடியோவில் மாட்டுச்சாணத்தை சாப்பிட்டுக் காட்டி இது உடல்நலத்திற்கு

டிசம்பரில் பாடல்கள்: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

டிசம்பரில் தான் இசையமைக்கும் படத்தின் பாடல்கள் வெளியாக இருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது