close
Choose your channels

ஏ.வி.ஆர்.ஸ்வர்ண மஹால் ஜுவல்லரி ஷோரூம்களில் 'குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0': நடிகை ப்ரீத்தி முகுந்தன் அறிமுகம் செய்த  நகைகள்..!

Monday, June 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தென்னிந்தியாவின் முன்னணி ஜூவல்லரி நிறுவனங்களில் ஒன்றாக ஏ.வி.ஆர். ஸ்வர்ணமஹால் ஜூவல்லரி “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” நகை டிசைன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ப்ரீத்தி முகுந்தன் “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” நகைகள் அறிமுகம் செய்தார். இவ்விழா சென்னை அண்ணா நகரில் உள்ள ஏ.வி.ஆர். ஸ்வர்ண மஹால் ஜூவல்லரியில் கோலாகலமாக நடைபெற்றது.

நகை அறிமுகம் குறித்து இயக்குனர் திரு AVR சித்தாந்த் கூறியதாவது:- எங்களின் முந்தைய குமரிக்கண்டம் கலெக்ஷனை பெரும் வெற்றியாக்கிய வாடிக்கையாளர்களுக்கு நன்றி. அதன் தொடர்ச்சியாக புதியதோர் உலகிற்கு நாங்கள் உங்களை அழைத்து செல்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். குமரிக்கண்டம் என்றாலே, தொன்மையான, அழியாத ஒரு பாரம்பரியத்தைக் குறிக்கும். அதனை மையமாகக் கொண்டு, “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” நகைகள், நம் முன்னோர்களின் கலை நுணுக்கத்தை, நவீன சாயலில் வழங்கும் ஒரு முயற்சியாகும். ஒவ்வொரு நகையும், அந்தத் தொன்மையான பரம்பரை மாறாமல், புதியதோர் அழகில் உருவாக்கப்பட்டுள்ளது.

நம் பாரம்பரியம் போற்றும் வகையில் அற்புத கலைநுணுக்கங்களோடு, உங்கள் வீட்டு இளவரசிக்கான, திருமண வைபவத்திற்கு ஏற்ற ஆயிரக்கணக்கான நகைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது! கற்பனையை மிஞ்சிய குமரிக்கண்டத்து பொற் சிற்பி நெய்த திருவாபரணங்கள் இங்கு கிடைக்கும்.

இந்தக் குமரிக்கண்டம் கலெக்ஷனின் சிறப்பு என்னவென்றால், இது முந்தைய கலெக்ஷனைவிட அதிக பரிசோதனைகளை எதிர்கொண்டு, அவற்றில் தோன்றிய பல புதுமைகளைச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. இவை, உங்கள் பார்வைக்கு மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கை முறைமைகளில் ஒரு முக்கியமான பங்காக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.மேலும் சிறப்பம்சமாக எங்களது அனைத்து ஷோரூம்களிலும் குமரிக்கண்டத்து உலகின் வழி எம்பெருமானின் வைபவத்துடன் கூடிய உற்சவ தரிசனம் நடைபெறுகிறது. அதனையும் வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம் என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய நடிகை ப்ரீத்தி முகுந்தன்:- ஏ.வி.ஆர்.ஸ்வர்ண மஹாலுடன் இரண்டாண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளேன் “குமரிக்கண்டம் கலெக்ஷன் 1.0” நகைகளை நான் தான் அறிமுகம் செய்தேன், நமது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் நகைகள் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் அருமையான விஷயம் “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” அறிமுகப்படுத்துவதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.இந்த அழகிய கலெக்ஷனை உங்கள் கண்களால் பார்க்க, உங்கள் இதயத்தில் உணர, ஏ.வி.ஆர். ஸ்வர்ண மஹால் ஜூவெல்லரிக்கு வருகை தாருங்கள் என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment