திருமணத்திற்குப் பிறகு நடிகை பிரணிதா வெளியிட்ட க்யூட் வீடியோ… வைரல்!

  • IndiaGlitz, [Saturday,July 03 2021]

தமிழில் நடிகர் அருள்நிதி நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான “உதயன்” எனும் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். பின்பு நடிகர் கார்த்தியுடன் “சகுனி”, நடிகர் சூர்யாவுடன் மாஸ் என்ற “மாசிலாமணி“ போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

தமிழ் சினிமாவைத்தவிர தெலுங்கு, கன்னடம் மொழிப் படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை பிரணிதா தற்போது பாலிவுட்டிலும் கால்பதித்து இருக்கிறார். இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் நிதின் ராஜு என்பவரை கடந்த மே 30 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் குறித்து யாருக்கும் தெரிவிக்காத அவர், கொரோனா இரண்டாம் அலை தொற்றின் காரணமாக நெருங்கின உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவித்து இருந்தார்.

மேலும் கொரோனா நேரத்தில் ஏழை மக்கள் பலருக்கும் இலவச கொரோனா தடுப்பூசிகளை வழங்கிய நடிகை பிரணிதா சாலையோர மக்களுக்கு இவலச உணவு மற்றும் மளிகை பொருட்களை தாராளாமாக வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வந்தார். அவர் தற்போது திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக க்யூட் பிங்க் நிற உடையணிந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

More News

சினிமா குரல் வளையை நெறிக்கும் புது சட்டம்… பதறும் சினிமா பிரபலங்கள்!

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்கனவே இருக்கும் சினிமா ஒளிப்பதிவு சட்டத்தில் (1952) சில மாற்றங்களை கொண்டு வர நினைக்கிறது.

6வது திருமண நாளை கொண்டாடிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன்: அழகிய புகைப்படங்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல தொலைக்காட்சி தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் 'பாண்டியன் ஸ்டோர்' தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே.

யாரை நம்புவது என்றே தெரியவில்லை: ஐஸ்வர்யா ராஜேஷின் அதிர்ச்சி பேட்டி!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடன் இருப்பவர்களே தனக்கு துரோகம் செய்வதாகவும் யாரை நம்புவது என்றே தெரியவில்லை என்றும் பேட்டி

கணவர் மீது மீண்டும் புகாரளித்த 'சுந்தரா டிராவல்ஸ்' நடிகை!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த நடிகை ராதா தனது கணவர் மீது புகார் அளித்தார் என்பதும் அதன் பின்னர் காவல்துறையினர் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்

சட்டம் என்பது நீங்கள் போடும் சட்டை அல்ல சூர்யா - தமிழ் நடிகை கருத்து!

மத்திய அரசு விரைவில் அமல்படுத்த உள்ள புதிய ஒளிப்பதிவு சட்ட திருத்தத்திற்கு எதிராக சூர்யா உள்பட பல திரையுலகினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.