கார் விபத்தில் நூலிழையில் உயிர் பிழைத்த சூர்யா-கார்த்தி நாயகி

  • IndiaGlitz, [Monday,February 15 2016]

பிரபல நடிகை ப்ரணிதா நேற்று படப்பிடிப்பு ஒன்றுக்காக 'கம்மம்' என்ற பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ப்ரணிதா உள்பட காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.


இதுகுறித்து நடிகை ப்ரணிதா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'நாங்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இருப்பினும் யாருக்கும் பெரிய காயம் இல்லை என்பது ஒரு ஆறுதல். மேலும் விபத்து நடந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் மிகுந்த அக்கறையுடன் ஆம்புலன்ஸை வரவழைத்து காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற உதவி செய்தனர். அவர்களுக்கு எனது நன்றி' என்று கூறியுள்ளார்

மேலும் விபத்து நடந்த பகுதியில் இருந்து நடிகை ப்ரணிதா உள்பட படக்குழுவினர்களை அந்த பகுதியில் இருந்த மக்கள் மினிபஸ்ஸில் பத்திரமாக அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சி.வி.குமாரின் முதல் படத்தில் சசிகுமார் நாயகி

அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், முண்டாசுப்பட்டி போன்ற பல வெற்றி படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவர் தற்போது இயக்குனராகியுள்ளார்....

கமல்ஹாசன் - ஸ்ருதிஹாசன் படத்தில் இணைந்த பாஜக எம்.பி

'தூங்காவனம்' படத்தை அடுத்து கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக வந்த செய்தி உறுதியாகியுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்..

சோழர் கதையில் அஜித். உறுதி செய்தார் பாலகுமாரன்

அஜித் நடித்த 'வேதாளம்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் சிறுத்தை சிவாவே இயக்கவுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளிவந்தது..

சமூக வலைத்தளங்களில் வலம் வரும் 6 வயது தனுஷ் போட்டோ

வெற்றிமாறனுடன் இணைந்து தனுஷ் தயாரித்த 'விசாரணை' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில், தனுஷ் தற்போது 'கொடி' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்....

கோலிவுட் பேய்ப்படத்தில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை

தமிழ் திரையுலகில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பேய்ப்பட சீசன் இருந்து வருகிறது. அறிமுக நடிகைகள் மட்டுமின்றி முன்னணி நடிகைகளான த்ரிஷா....