close
Choose your channels

இளைஞர் கொலை வழக்கு: தர்ஷனுடன் 10 வருடங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நடிகையும் கைது..!

Friday, June 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே இளைஞர் கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது தர்ஷனுடன் 10 வருடங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பிரபல நடிகையும் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல கன்னட நடிகர் தர்ஷனுக்கும் விஜயலட்சுமி என்பவருக்கும் திருமணம் ஆகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் இந்த தம்பதிக்கு விக்னேஷ் என்ற மகன் உள்ளார். ஆனால் தர்ஷன், விஜயலட்சுமி ஆகிய இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக விஜயலட்சுமி, கணவர் மீது வழக்கு தொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் நடிகை பவித்ரா என்பவர் தர்ஷன் உடன் சில படங்கள் நடித்திருக்கும் நிலையில் அவருக்கும் திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கிறார். ஆனாலும் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக இருக்கிறார்.

இந்த நிலையில் பவித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷன் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து இருவரும் 10 ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து தர்ஷன் ரசிகரான ரேணுகா சாமி என்பவர் பவித்ராவுக்கு மிரட்டல் விடுத்ததோடு,ஆபாச மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து தர்ஷன் ரேணுகா சாமியை அழைத்து வந்து அடித்ததாகவும் அப்போது அவர் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து தர்ஷன் உத்தரவு பெயரில் கொலைப்பழியை ஏற்று மூன்று பேர் போலீசில் சரணடைந்ததாகவும் அந்த மூன்று பேரின் குடும்பத்திற்கு இலட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது நடிகை பவித்ராவும் கைது செய்யப்பட்டு இருவரிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.