close
Choose your channels

மரணப்படுக்கையிலும் மகனுக்காக அரசுக்கு கோரிக்கை வைத்த 'தூள்' பட நடிகை

Thursday, October 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம், ஜோதிகா நடித்த ‘தூள்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பரவை முனியம்மா நடித்திருந்தார். பிரபல கிராமிய பாடகியான இவர் இந்த படத்தில் பாடிய ‘சிங்கம் போல’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் பல படங்களில் நடிக்கவும் பாடவும் செய்தார்

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு உடல்நலமின்றி மருத்துவமனையில் பரவை முனியம்மா அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவருக்கு மாதம் ரூ.6000 உதவித்தொகையாக கிடைக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வரும் பரவை முனியம்மா, தனக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் தனது மாற்றுத்திறனாளி மகனுக்கு, தனக்கு கிடைக்கும் உதவித்தொகையை தரவேண்டும் என்று அரசுக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார். மரணப்படுக்கையிலும் தன்னை பற்றி கவலைப்படாமல், தனது மகனுக்காக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ள அந்த தாயுள்ளத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment