'மீடூ' குறித்து சற்றுமுன் ஓவியா பதிவு செய்த டுவிட்!

  • IndiaGlitz, [Monday,May 24 2021]

பிரபல தமிழ் நடிகையான ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்குப் பின்னரே ரசிகர்களின் பேராதரவை பெற்றார் என்பதும் அவருக்குத் தான் முதன்முதலாக ரசிகர்கள் டுவிட்டரில் ஆர்மி ஆரம்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை வைத்து அவர் பெரிதாக திரையுலகில் சாதித்ததாக தெரியவில்லை. அவருக்கு ஓரிரு படங்கள் மட்டுமே வாய்ப்புகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அவர் தனது டுவிட்டரில் ஆக்டிவ் ஆக உள்ளார் என்பதும் அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு டுவிட்டூகளுக்கும் லட்சக்கணக்கில் லைக்ஸ்கள் குவியும் என்பதும் குறிப்பிடதக்கது. கடந்த சில நாட்களாகவே அவர் மத்திய அரசுக்கு எதிராகவும் சில கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் அவர் ’மீடூ’ குறித்த ஒரு பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் ’நேர்மையை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன். ’மீடூ’ குறித்து வெளியே பேசுவதற்கே ஒரு தைரியம் வேண்டும் என்று எனக்கு புரிகிறது’ என்று தெரிவித்துள்ளார். சென்னை தனியார் பள்ளி குறித்த டுவிட்டாக இருக்கலாம் என ஓவியாவின் ரசிகர்கள் இந்த ட்வீட்டை பார்த்தது கமெண்ட் அளித்து வருகின்றனர். ஒருசிலர் ’இன்னைக்கு ஒரு பிரேக்கிங் நியூஸ் இருக்குது போல’ என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.