திடீரென காவல்துறையில் புகார் அளித்த நடிகை நிரோஷா.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Wednesday,September 06 2023]

நடிகை நிரோஷா திடீரென தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது வீட்டில் திருடு போய்விட்டதாக புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டில் நகைகள் திருட்டு போனதாக புகார் அளித்தார். விசாரணையில் அவர் வீட்டில் வேலை செய்த பெண் தான் திருடினார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து நடிகை ஷோபனா தனது வீட்டில் திருட்டு போனதாக புகார் அளித்தார். இவரது வீட்டிலும் வேலை செய்தவர் தான் திருடியது தெரியவந்தது.

இந்த நிலையில் தற்போது ராதிகாவின் தங்கையும் நடிகர் ராம்கியின் மனைவியுமான நடிகை நிரோஷா தனது குடும்பத்துடன் தேனாம்பேட்டையில் உள்ள ஜெமினி பார்சன் என்ற அடுக்குமாடி குடியிருப்பு வசித்து வரும் நிலையில் தனது வீட்டில் இருந்த சொத்து ஆவணங்கள் திருடு போய்விட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.