நீலிமா ராணியின் க்யூட் குழந்தைகள் புகைப்படம்.. மூத்த மகள் இவ்வளவு வளர்ந்துவிட்டாரா?

தமிழ் திரைப்பட மற்றும் சீரியல் நடிகை நீலிமா ராணியின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவருடைய மூத்த மகள் எவ்வளவு பெரியவராக வந்து விட்டாரா? என்று ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

சிவாஜி கணேசன், கமல்ஹாசன் நடித்த ’தேவர் மகன்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நீலிமா ராணி, அதன் பிறகு பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். இந்த நிலையில் திரைப்படங்கள் மட்டுமின்றி மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல். வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்தார் என்பதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்ட நீலிமா ராணிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது என்பதும் குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது நீலிமா ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் தன் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் இரண்டாவதாக பிறந்த மகள் க்யூட்டாக இருப்பதாகவும் மூத்த மகள் இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டதாகவும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது.