நடிகை நக்மாவின் வங்கிக்கணக்கில் ரூ.1 லட்சம் மோசடி.. அதிர்ஷ்டவசமாக தப்பித்த பெரும் தொகை..!

  • IndiaGlitz, [Thursday,March 09 2023]

நடிகை நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து மோசடி நபர் ஒருவர் சுமார் ஒரு லட்ச ரூபாய் எடுத்துவிட்டதாகவும் ஆனால் நக்மா சுதாரித்துக் கொண்டதை அடுத்து பெரும் தொகை தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பாட்ஷா’ உள்பட பல தமிழ் திரைப்படங்களிலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை நக்மா. தற்போது இவர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாக உள்ளார் என்பதும் கடந்து சில ஆண்டுகளாக அவர் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை நக்மாவுக்கு மர்ம நபர் ஒருவர் போனில் பேசி ரூபாய் ஒரு லட்சம் வரை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கி கணக்கின் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என வங்கியின் பெயரிலிருந்து நடிகை நக்மாவின் மொபைல்போனுக்கு ஒரு லிங்க் வந்ததாகவும் அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும் என மெசேஜ் வந்ததாகவும் தெரிகிறது.

நடிகை நக்மா அந்த லிங்கை கிளிக் செய்தவுடன் வங்கிய அதிகாரி போல் பேசிய ஒருவர் கேஒய்சி விபரங்களை அப்டேட் செய்ய தான் உதவுவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகை நக்மா எந்தவிதமான ஓடிபியையும் பகிர்ந்து கொள்ளாத நிலையில் திடீரென அவரது செல்போனை தனது கட்டுப்பாட்டுகள் எடுத்துக் கொண்ட அந்த மர்ம நபர் ரூபாய் 99,998 தொகையை வேறு ஒரு வங்கி கணக்கிற்கு மாற்றியதாக தெரிகிறது.

இதனை அடுத்து தனது மொபைல் போனுக்கு 20க்கும் மேற்பட்ட ஓடிபிகள் வந்ததாகவும் ஆனால் அதை தான் பகிரவில்லை என்பதால் பெரும் தொகை தப்பித்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து மும்பை சைபர் கிரைம் காவல்துறையில் நடிகை நக்மா புகார் அளித்துள்ளதாகவும் இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து மர்ம நபரை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நடிகை ஸ்வேதா மேனன் உள்பட சுமார் 80 பேர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பல லட்ச ரூபாய் மோசடி செய்த கும்பல் குறித்த செய்தி வெளியான நிலையில் தற்போது நக்மாவின் வங்கிக் கணக்கிலிருந்தும் சுமார் ஒரு லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News

வைரமுத்துவின் மகளிர் தின வாழ்த்துக்கு சின்மயி ரியாக்சன்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்கள்..!

 நேற்று மார்ச் 8ஆம்  தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உ

ஒரே நேரத்தில் இரண்டு படங்கள்.. நடிகர் சூர்யாவின் மாஸ் பிளான்..!

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில்

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தின் சூப்பர் அப்டேட்.. குஷியில் ரசிகர்கள்..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தேசிய விருது பெற்ற 'மண்டேலா' என்ற படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாக்கி வரும் திரைப்படம் 'மாவீரன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக

'வடசென்னை 2' எப்போது? இயக்குனர் வெற்றிமாறன் தகவல்..!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'வடசென்னை' திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்தது என்பது தெரிந்ததே.

 இதுவரை கேட்காத இசையை கேட்பீர்கள்: 'விடுதலை' குறித்து இசைஞானி இளையராஜா..!

'விடுதலை' படத்தில் இதுவரை கேட்காத இசையை கேட்பீர்கள் என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.