ஒரு கூட்டம் என்னை 2-வது திருமணம் செய்ய சொல்கிறது: நடிகை மேக்னா ராஜ்

ஒரு கூட்டம் என்னை இரண்டாவது திருமணம் செய்ய சொல்கிறது என்றும், இன்னொரு கூட்டம் குழந்தைக்காக வாழுங்கள் என்று சொல்கிறது என்றும் நடிகை மேக்னா ராஜ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னட திரையுலகின் பிரபல நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை கடந்த 2018-ஆம் ஆண்டில் நடிகை மேக்னா ராஜ் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு திடீரென சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் மரணம் அடைந்தார். அப்போது மேக்னாராஜ் கர்ப்பிணியாக இருந்த நிலையில் அதன் பின் சில மாதங்கள் கழித்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

கணவரை இழந்த சோகத்தில் இருந்து தற்போது படிப்படியாக மீண்டு உள்ள மேக்னா ராஜ், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் தனது குழந்தையின் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் மேக்னாராஜ் இரண்டாம் திருமணம் செய்யப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் ’குழந்தையை வளர்ப்பது மற்றும் குழந்தையின் எதிர்காலம் பற்றி சிந்திப்பது ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறேன். ஒரு கூட்டம் என்னை இரண்டாவது திருமணம் செய்ய சொல்கிறது, ஆனால் இன்னொரு கூட்டமோ மகனுக்காக மகிழ்ச்சியுடன் வாழுங்கள் என்று சொல்கிறது. நான் எதை கேட்பது என்று தெரியவில்லை. இரண்டாவது திருமணம் குறித்த கேள்வியை என்னிடம் இன்னும் நான் கேட்கவில்லை. இந்த தருணத்தை சந்தோஷமாக வாழ்ந்து விட வேண்டும் என்று என் கணவர் சொல்வார், அதனால் நாளை நடப்பதை பற்றி நான் எதையும் யோசிக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

More News

'பீஸ்ட்' அரபிக்குத்து நடன இயக்குனருக்கு கிடைத்த சூப்பர் புரமோஷன்: குவியும் வாழ்த்துக்கள்

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது என்பதும், இந்த பாடலுக்கு நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணிபுரிந்தார் என்பது

மீண்டும் போலீஸ் கேரக்டரில் கீர்த்தி சுரேஷ்? ஹீரோ யார் தெரியுமா?

செல்வராகவன் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கிய 'சாணிக்காகிதம்' என்ற படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மீண்டும் போலீஸ் கேரக்டரில் நடிக்க இருப்பதாக . 

'வீரன் வேலுத்தம்பி' கேரக்டரில் நடிக்கும் விஜய்யின் ' வாரிசு ' நடிகர்!

தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் ஒருவர் வீரன் வேலுத்தம்பி என்ற சுதந்திர போராட்ட வீரர் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

'கபாலி' படத்தால் மன உளைச்சல் அடைந்தேன்: பா ரஞ்சித்

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தை இயக்கிய பிறகு மன உளைச்சலில் இருந்தேன் என்றும் அந்த மன உளைச்சலை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தான் தீர்த்து வைத்தார்

பொது இடத்தில் நிர்வாணமாக குளிக்க மனைவியை கட்டாயப்படுத்திய கணவர் கைது: அதிர்ச்சி காரணம்!

பொது இடத்தில் நிர்வாணமாக குளிக்க மனைவியை கட்டாயப்படுத்திய கணவர் கைது செய்யப்பட்டிருப்பது புனேவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.