நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் அம்மா ஷோபாவை சந்தித்த நடிகை.. எமோஷனல் பதிவு..!

  • IndiaGlitz, [Saturday,April 06 2024]

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யின் அம்மா ஷோபாவை சந்தித்ததாக எமோஷனலாக நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடித்த ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் நடிகை வனிதா விஜயகுமார் அறிமுகமானார் என்பதும் முதல் படத்தில் அவருக்கு விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அவர் அதிர்ஷ்டமானவர் என்றும் அப்போது பேசப்பட்டது. அதன்பின் ஒருசில படங்களில் நாயகியாகவும், சில படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் நடித்த வனிதா விஜயகுமார் தற்போது கூட சில படங்கள் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பார்த்திபன் இயக்கிய ’டீன்ஸ்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்த நிலையில் அதில் வனிதா விஜயகுமார் கலந்து கொண்டார். இந்த படத்தில் வனிதாவின் மகள் ஜோவிகா நடித்துள்ள நிலையில் வனிதா இந்த விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் தான் தளபதி விஜய்யின் அம்மா ஷோபாவை வனிதா விஜயகுமார் சந்தித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் ஷோபா ஆன்ட்டி அவர்களை நீண்ட இடைவெளிக்கு பிறகு ’டீன்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பார்க்கிறேன். அவருடைய அன்பான வார்த்தைகள் மற்றும் அருமையான ஆசீர்வாதங்கள் எனக்கும் என்னுடைய மகள் ஜோவிகாவுக்கும் கிடைத்தது என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் வீட்டில் விசேஷம்.. வைரல் புகைப்படங்கள்..!

சின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜ் வீட்டில் விசேஷம் நடந்ததை அடுத்து அது குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.

இன்று 'கோட்' பிரசாந்த் பிறந்தநாள்.. வாழ்த்து கூறினாரா தளபதி விஜய்?

தளபதி விஜய் நடித்து 'கோட்' கோட் படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் பிரசாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள்

குதிரை சவாரி பயிற்சி பெற்று வரும் நடிகர் சூர்யா.. காரணம் இதுதான்..!

சூர்யாவின் 44வது திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்திற்காக அவர் குதிரை சவாரி பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இன்று சனி மகா பிரதோஷம்: ஈசனை வழிபட்டு நன்மைகள் பெறுங்கள்!

பிரதோஷம் என்பது சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் பிரதோஷ காலம் எனப்படும்.

வேலை கிடைக்க வேல் வழிபாடு⚜️: ஜோதிடர் சீதா சுரேஷ் ரகசியம் மற்றும் வேல் மாறல் மந்திரம்

ஆன்மீக பேச்சாளர் விஜய்குமார், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் ஒடுக்கத்தூர் மகான் பற்றியும், அவரது அற்புதங்கள் பற்றியும் பேசியுள்ளார்.