பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கு.....! நடிகை மீரா மிதுன் அதிரடி கைது....!

  • IndiaGlitz, [Saturday,August 14 2021]

பிக்பாஸ்  நிகழ்ச்சி மூலம் சர்ச்சைகளில் பிரபலமான நடிகை தான்  மீரா மிதுன்.  பிரபலமாவதற்காக முன்னணி நடிகர்கள் குறித்து அவதூறாக பேசி இணையவாசிகளிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார். திரைத்துறை பிரபலங்கள், ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் மீராவிற்கு  கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.



இந்தநிலையில் அண்மையில் குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தன் முகத்தை காப்பி அடித்து பயன்படுத்துவதாகவும், அவர்களை சினிமாவை விட்டே துரத்த வேண்டும் என்றும்  குற்றம் சாட்டிய மீரா, சாதி குறித்து இழிவாக பேசியிருந்தாள். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக, சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதன் அடிப்படையில்  பட்டியலின மக்களை அவதூறாக பேசிய குற்றத்திற்காக மீராமீதுன் மீது, போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.



இதையடுத்து சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எதிராக அவதூறாக பேசிய வழக்கில், மீரா மிதுனை கேராளாவில் வைத்து இன்று கைது செய்தனர்.

More News

அஜித்துக்கு பாடினேன் என்று கடைசி வரை தெரியாது: அனுராக் குல்கர்னியின் ஆச்சரிய தகவல்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பாடலை பாடிய அனுராக் குல்கர்னி கடைசிவரை இந்த பாட்டை நான் யாருக்காக பாடினேன்

மதுரை ஆதீனத்தின் அடுத்த மாடாதிபதி யார்? நித்யானந்தாவின் கனவு?

மதுரை ஆதீனத்தின் 292 ஆவது மடாதிபதி அருணகிரிநாதர் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

யாரெல்லாம் 3 ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்?

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்கள் 3 ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) வலியுறுத்தி இருக்கிறது

டிவி தொடரில் வில்லியாக மிரட்டும் தனுஷ் பட நாயகி!

சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வரும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட நடிகை நமீதா சின்னத்திரைக்கு அறிமுகமாக உள்ளார்

சின்னத்திரையில் மாஸ்-ஆக ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை நமீதா.....!

தனியார் தொலைக்காட்சியான ஜீ-தமிழில் ஒளிபரப்பாகின்ற சீரியல் மூலம் நடிகை நமீதா ரீ-என்ட்ரீ கொடுக்கவுள்ளார்.