close
Choose your channels

நான்கு நாட்களில் இரண்டு முறை திருமணம் செய்த தமிழ் நடிகை

Thursday, May 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா ஆகிய தமிழ் படங்களிலும், ஒருசில கன்னட, மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை மேக்னாராஜ். இவரும் ஆக்சன் கிங் அர்ஜூன் அண்ணன் மகன் சிரஞ்சீவியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது 

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி கிறிஸ்துவ மத முறைப்படி திருமணம் செய்து கொண்ட சிரஞ்சீவி-மேக்னாராஜ் ஜோடி, மீண்டும் நேற்று அதாவது மே 2ஆம் தேதி இந்து முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் நான்கு நாட்களில் இரண்டு முறை நட்நதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பெங்களூரில் நடந்த இந்து முறைப்படியான திருமணத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் தனது குடும்பத்தினர்களுடன் கலந்து கொண்டு தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் இந்த திருமணத்தில் தமிழ், கன்னட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment