குஷ்புவின் வீட்டில் நிகழ்ந்த சோகம்.. திரையுலகினர் இரங்கல்!

  • IndiaGlitz, [Saturday,December 17 2022]

நடிகை குஷ்புவின் வீட்டில் நிகழ்ந்த சோகத்தை அடுத்து திரையுலகினர் ரசிகர்கள் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு என்பதும் கமல், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த குஷ்பு அதன்பின் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தனது அண்ணனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது தனது அண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகவும் அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

தனது சகோதரரின் பயணம் முடிந்து விட்டதாகவும் அவரது அன்பும் வழிகாட்டலும் தனக்கு எப்போதும் இருக்கும் என்றும் வாழ்க்கையில் ஒவ்வொருவரின் பயணமும் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது என்றும் அவர் வருத்தத்துடன் பதிவு செய்து உள்ளார்.

குஷ்புவின் இந்த பதிவை அடுத்து அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். மேலும் அவரது அண்ணனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

More News

'அவதார் 2' படம் பார்த்த ரசிகர் திடீர் மரணம்.. என்ன காரணம்?

சமீபத்தில் வெளியான 'அவதார் 2' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம்

பாலிவுட் திரைப்படங்களின் தோல்விக்கு இந்த ஒரு காரணம் தான்.. எஸ்.எஸ்.ராஜமெளலி

கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் திரைப்படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து கொண்டிருப்பதற்கு இந்த ஒரு காரணம் தான் என பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி தெரிவித்துள்ளார். 

சீட்டாட்டம் விழிப்புணர்வு குறித்து படமே எடுத்தேன்: ஆன்லைன் ரம்மி குறித்து பிரபல நடிகர்!

சீட்டு விளையாட்டினால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு திரைப்படமே எடுத்தேன் என தமிழ் நடிகர் ராஜ்கிரன் அவர்கள் கூறியுள்ளார்.

மதுரை முத்துவின் முதல் மனைவி.. இதுவரை யாரிடமும் சொல்லாத விஷயம்!

மதுரை முத்துவின் முதல் மனைவி குறித்து இதுவரை யாரிடமும் சொல்லாத ஒரு விஷயத்தை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

ட்ரோன் மூலம் படமாக்கப்படும் 'சூர்யா 42': வைரல் புகைப்படம்!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'சூர்யா 42' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது