இயக்குனராக அறிமுகமாகும் விஜய், விக்ரம் பட நாயகி!

  • IndiaGlitz, [Monday,March 09 2020]

விஜய் நடித்த ’கண்ணுக்குள் நிலவு’, விக்ரம் நடித்த ’காசி’ உள்பட ஏராளமான தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்த நடிகை ஒருவர் தற்போது இயக்குனராகி உள்ளார்.

நடிகை காவேரி கடந்த 1986ஆம் ஆண்டு மலையாள படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் விஜய் நடித்த 'கண்ணுக்குள் நிலவு' என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்த காவேரி, சரத்குமாரின் 'சமுத்திரம்', விக்ரமின் ’காசி’, 'புன்னகைப்பூவே' உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது ஒரு திரைப்படத்தை அவர் இயக்க உள்ளார் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார்.

உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உருவாகவுள்ள இந்த படத்தை கே2கே என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் டீசரை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது