close
Choose your channels

அசுர சாதனை செய்த தமிழக அரசை கிண்டல் செய்த தமிழ் நடிகை!

Monday, October 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்று விளம்பரமும் செய்துவிட்டு மதுவையும் விற்பனை செய்து அரசு, இந்த ஆண்டு தீபாவளிக்கு மதுவிற்பனையில் சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி நாட்களில் அதாவது அக்டோபர் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களில் மொத்தம் ரூ.455 கோடிக்கு மது விற்பனை செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் இந்த சாதனை குறித்து நடிகை கஸ்தூரி கூறியுள்ளதாவது:

தமிழகம் - அசுர சாதனை!*

டாஸ்மாக் விற்பனையில் தமிழக அரசு சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளது.

25-10-2019 = 100cr 26-10-2019 = 183 cr 27-10-2019 = 172 cr ஆகமொத்தம் 455 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளது. தமிழனென்று சொல்லடா, தள்ளாடி நில்லடா !

கடந்த வருடம் 325 கோடி ரூபாய் விற்ற நிலையில் இந்த வருடம் 455 கோடி ரூபாய்க்கு மதுபானங்களை விற்று சாதனை! என்று நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கிண்டலுடன் பதிவு செய்துள்ளார். கஸ்தூரியின் இந்த பதிவிற்கு பெரும்பாலான நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos