நமது அரசியல்வாதிகளின் இதயம் பலவீனமானவை.. செந்தில் பாலாஜி கைது குறித்து தமிழ் நடிகை கிண்டல்..!

  • IndiaGlitz, [Wednesday,June 14 2023]

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நேற்று நள்ளிரவு திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கைதுக்கு திமுக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து தமிழ் நடிகை கஸ்தூரி கிண்டலாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘செந்தில் பாலாஜி எவ்வளவு துடிக்கிறார்? ரெய்டு போகும்போது அமலாக்க துறை மற்றும் வருமான துறை அதிகாரிகளோடு மருத்துவர்களும் அவசியம் செல்ல வேண்டும். இந்திய அரசியல்வாதிகள் வலுவில்லாத இதயங்களை கொண்டிருக்கிறார்கள், ஒவ்வொரு சிறைச்சாலையிலும் இதயத்திற்கு சிறப்பு சிகிச்சை அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

 

காவலர்கள் இதயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பயிற்சி பெற வேண்டும். மேலும் போலீஸ் ஜீப்புக்கு பதிலாக கைது செய்த பின் ஆம்புலன்ஸ் பயன்படுத்தலாம் என்று செந்தில் பாலாஜி நெஞ்சு வலியால் துடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து கூறியுள்ளார்.

வழக்கம் போல் கஸ்தூரியின் இந்த ட்விட்டிற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

More News

250 வது  ராம்ராஜ்   ஷோரூம்.. பிரபல நடிகர் வெங்கடேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்..!

இந்தியாவின் தலைசிறந்த ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான ராம்ராஜ் காட்டன் நிறுவனம் 250 வது கிளையை விஜயவாடாவில் திறந்த நிலையில் இந்த கிளையை பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் திறந்து வைத்துள்ளார்.

தமன்னாவின் சொத்து மதிப்பில் 5ல் ஒரு பங்கு கூட காதலரிடம் இல்லையா? ஆச்சரிய தகவல்..!

நடிகை தமன்னா, நடிகர் விஜய் வர்மா என்பவரை காதலிப்பதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் அவருடைய சொத்து மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கு கூட அவருடைய காதலரிடம் இல்லை என்பது ஆச்சரியத்தக்க தகவலாக உள்ளது.

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் 'சீதாராமம்' மிருணாள் தாக்கூர்.. ஹீரோ யார் தெரியுமா?

துல்கர் சல்மான், ரஷ்மிகா மந்தனா நடித்த 'சீதாராமம்' என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தவர் மிருணாள் தாக்கூர் என்பதும் இந்த படம் அவருக்கு தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை

பார்த்திபனின் அடுத்த பட டைட்டில் இதுதானா? இதுவரை யாரும் தொடாத வித்தியாசமான கதை..!

தமிழ் திரை உலகின் வித்தியாசமான நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனின் அடுத்த படம் குறித்த டைட்டில் தற்போது வெளியாகி உள்ளது.

பீச்சில் உடலுறவு கூடாது… கடுமையாக எச்சரிக்கும் அளவிற்கு வைரலான சம்பவம்!

ஐரோப்பிய நாடுகளில் ஒனறான நெதர்லாந்தில் ஒரு நகரத்தை ஒட்டியுள்ள கடற்கரைக்கு செல்லும் ஜோடிகள் உடலுறவில் ஈடுபடக் கூடாது, மீறினால் கடும் தண்டனை விதிக்கப்படும்