உழைப்பாளர் தினத்தில் என்பது எவ்வளவு பொருத்தம்! அஜித்துக்கு பிரபல நடிகை வாழ்த்து

  • IndiaGlitz, [Friday,May 01 2020]

சமூக வலைத்தளத்தில் கடந்த சில மாதங்களாக அஜித் ரசிகர்களும் நடிகை கஸ்தூரியும் மோதுவது என்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. ஒரு கட்டத்தில் அஜித் ரசிகர்கள் எல்லை மீறியபோது அஜித்துக்கும் அவரது மேனேஜருக்கும் சமூக வலைத்தளம் மூலமே நடிகை கஸ்தூரி புகார் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் ரசிகர்கள் அவரிடம் மோசமாக நடந்து கொண்டாலும் அஜித் மீது அவருக்கு எப்போதும் ஒரு தனி மரியாதை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அஜித் பிறந்த நாளான இன்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துப்பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

50 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் 'தல' அஜித்குமார் அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள். தமிழில் சினிமாவில் நிலையான வெற்றியை பெறுவது அனைவருக்கும் கைகூடுவதில்லை. அயராத உழைப்பு, அசராத தன்னம்பிக்கை, அத்துடன் கொஞ்சம் அதிர்ஷ்டம் இதுதான் அஜித்குமார். யாருக்கும் வாரிசு இல்லை. தானே படம் தயாரிக்கவில்லை. எந்த பின்புலமும் இல்லாமல், யாரின் பக்கபலமும் இல்லாமல் உழைப்பு ஒன்றையே மூலதனமாக வைத்து உச்சத்தை தொட்ட அஜித் குமார் பிறந்தது உழைப்பாளர் தினத்தில் என்பது எவ்வளவு பொருத்தம்!

பொது வாழ்க்கையில் எப்படி ஒரு தலைமுறைக்கு உதாரணமாக திகழ்கிறாரோ, சொந்த வாழ்க்கையிலும் உதவும் மனப்பான்மைக்கும் நேர் கொண்ட பார்வைக்கும் முன்னுதாரணமாக உள்ளார். அவரின் அபிமானிகள் அவர் வழியில் அன்பாகவும் கண்ணியமாகவும் நடப்பதே அவருக்கு கொடுக்கும் மிக சிறந்த பரிசு.

More News

தொழிலாளர் தினத்தில் கமல் வெளியிட்ட சின்னம்: இணையத்தில் வைரல்

இன்று மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலக நாயகன் நடிகருமான கமல்ஹாசன் காலையிலேயே தொழிலாளர்களை பெருமைப்படுத்தும் வகையில்

உங்க அம்மா பெட்ரூமுக்கு லாக் போட்டிருந்தா? கஸ்தூரியின் பதிலடியால் அதிர்ச்சியில் ரசிகர்

தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் ஊரடங்கு உத்தரவு முடிவடைய இருப்பதால்  மேலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில்

தமிழகத்தில் முதல்முறையாக 200க்கும் மேல் கொரோனா பாதிப்பு: மிக ஆபத்தான நிலையில் சென்னை

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்சேதுபதி பட இயக்குனரின் 'மே தின வாழ்த்து செய்தி'

'இயற்கை', 'ஈ', 'பேராண்மை', 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை', 'பூலோகம்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தற்போது விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் 'லாபம்' என்ற படத்தை இயக்கி வருகிறார்

சென்னை விடுதி அறையில் மருத்துவ கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு

சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி விடுதி அறையில் தங்கியிருந்த நிலையில் திடீரென அவர் மர்மமான முறையில் நேற்று இரவு மரணம் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது