உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருங்கள்: குழந்தையின் தாய் தற்கொலை குறித்து பிரபல நடிகை..!

  • IndiaGlitz, [Tuesday,May 21 2024]

சமீபத்தில் சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பால்கனிகள் குழந்தை தவறி விழுந்த நிலையில் அந்த குழந்தை பொதுமக்களால் காப்பாற்றப்பட்டது. இந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக அந்த குழந்தையின் தாய் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து தனது மன வருத்தத்தை நடிகை கல்யாணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு குழந்தை பால்கனியில் இருந்து கீழே விழப்போன நிலையில் அந்த குழந்தையை பொதுமக்கள் சேர்ந்து காப்பாற்றினார் என்ற தகவலை அனைவரும் அறிந்திருப்பீர்கள். இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. ஆனால் அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. அந்த குழந்தையின் அம்மாவை போறவங்க வர்றவங்க எல்லாம் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததும், அந்த தாயை பலர் டார்ச்சர் செய்திருப்பதாக தெரிகிறது. கடுமையான விமர்சனம் மூலம் அந்த தாய்க்கு பயங்கர வலியை கொடுத்து இருக்கிறார்கள்.

அந்த குழந்தையின் அம்மா ஏற்கனவே மன உளைச்சலில் இருந்ததால் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார்கள் என்று நான் ஒரு செய்தி படித்தேன். நானும் அந்த நிலையில் இருந்து வந்தவர் என்ற முறையில் அந்த வலி எனக்கு தெரியும்.

இதில் எதுவுமே எனக்கு தப்பாக படவில்லை, இது ஒரு எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து, உண்மையில் அந்த தாய் பால்கனியில் இருந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார், அப்போது எதிர்பாராத விதமாக அந்த குழந்தை பால்கனியிலிருந்து கீழே விழுந்து உள்ளது, இந்த சம்பவம் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம், ஒரே ஒரு வினாடி தவறு ஏற்பட்டால் இந்த மாதிரி விபத்து நடந்து விடும், குழந்தைகளுக்கு எப்போதுமே குதிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும், அந்த ஆவலில் தான் அந்த குழந்தை குதித்ததால் ஏற்பட்ட விபத்து தான் இது.

எதிர்பாராமல் நடந்த விபத்து என்பதை கூட புரிந்து கொள்ளாமல், யாருக்கு வேண்டும் என்றாலும் நடக்கும் என்பதை கூட தெரிந்து கொள்ளாமல், அவர் மீது கடுமையாக விமர்சனம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை பெற்ற எல்லோருக்கும் இந்த கஷ்டம் தெரியும், ஆனாலும் அவர் இன்று எடுத்து தவறான முடிவுக்கு சமூக வலைதள பயனாளிகளின் கடுமையான விமர்சனமே காரணம்.

உண்மையில் இந்த சம்பவம் நடந்தவுடன் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் தான் ஈடுபட்டு இருக்க வேண்டும். பரவாயில்லை ஏதோ தெரியாமல் நடந்து விட்டது, இதுக்காக வருத்தப்பட வேண்டாம், இனிமேல் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்ல வேண்டுமே தவிர உனக்கெல்லாம் குழந்தை தேவையா என்று மோசமாக விமர்சனம் செய்ததன் விளைவு தான் இன்று அந்த குழந்தை ஒரு தாயை இழந்துவிட்டது, இதுபோன்ற நிலையில் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருங்கள்’ என்று நடிகை கல்யாணி வீடியோவில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வருகிறது.

நடிகை கல்யாணி, விஜயகாந்த் நடித்த ‘ரமணா’ படத்தில் அவரிடம் வளரும் குழந்தைகளில் ஒருவராக நடித்துள்ளார் என்பதும், பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சூரிக்காக இணையும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், வெற்றிமாறன்.. இன்று ஒரு செம்ம விருந்து..!

சூரி நடித்த 'கருடன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற இருப்பதை அடுத்து இந்த விழாவில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மற்றும் வெற்றிமாறன் கலந்து கொள்ள

மறுபடியும் ஒரு 'ஆலுமா டோலுமா' பாடல்.. அஜித்துக்காக அனிருத் செய்த தரமான சம்பவம்..!

அஜித் நடித்த 'வேதாளம்' திரைப்படத்திற்கு இசையமைத்த இசை அமைப்பாளர் அனிருத் 'ஆலுமா டோலுமா' என்ற சூப்பர் ஹிட் பாடலை கம்போஸ் செய்த நிலையில் மீண்டும் அஜித்துக்காக அதேபோன்ற ஒரு

அஜித்தின் 'குட் பேட் அக்லி' பர்ஸ்ட் லுக் வெளியாக இந்த 700 பேர் காரணமா? ஆச்சரிய தகவல்..!

அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இப்போது வெளியிட படக்குழுவினர் திட்டமிடவில்லை

காதலிக்க நேரமில்லை தொடரில் நடித்த சந்திராவின் ரீ-என்ட்ரி

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.இது இவரது ரசிகர்கள் பலருக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளன...

என்னது சந்திரமுகி படத்தில் கங்கா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது சிம்ரனா ?

சந்திரமுகி படத்தில் கங்கா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது சிம்ரன் என தெரிய வந்துள்ளது.சில பல காரணங்களால் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என்ற செய்தி கசிந்துள்ளது...