உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருங்கள்: குழந்தையின் தாய் தற்கொலை குறித்து பிரபல நடிகை..!

  • IndiaGlitz, [Tuesday,May 21 2024]

சமீபத்தில் சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பால்கனிகள் குழந்தை தவறி விழுந்த நிலையில் அந்த குழந்தை பொதுமக்களால் காப்பாற்றப்பட்டது. இந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக அந்த குழந்தையின் தாய் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து தனது மன வருத்தத்தை நடிகை கல்யாணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு குழந்தை பால்கனியில் இருந்து கீழே விழப்போன நிலையில் அந்த குழந்தையை பொதுமக்கள் சேர்ந்து காப்பாற்றினார் என்ற தகவலை அனைவரும் அறிந்திருப்பீர்கள். இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. ஆனால் அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. அந்த குழந்தையின் அம்மாவை போறவங்க வர்றவங்க எல்லாம் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததும், அந்த தாயை பலர் டார்ச்சர் செய்திருப்பதாக தெரிகிறது. கடுமையான விமர்சனம் மூலம் அந்த தாய்க்கு பயங்கர வலியை கொடுத்து இருக்கிறார்கள்.

அந்த குழந்தையின் அம்மா ஏற்கனவே மன உளைச்சலில் இருந்ததால் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார்கள் என்று நான் ஒரு செய்தி படித்தேன். நானும் அந்த நிலையில் இருந்து வந்தவர் என்ற முறையில் அந்த வலி எனக்கு தெரியும்.

இதில் எதுவுமே எனக்கு தப்பாக படவில்லை, இது ஒரு எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து, உண்மையில் அந்த தாய் பால்கனியில் இருந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார், அப்போது எதிர்பாராத விதமாக அந்த குழந்தை பால்கனியிலிருந்து கீழே விழுந்து உள்ளது, இந்த சம்பவம் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம், ஒரே ஒரு வினாடி தவறு ஏற்பட்டால் இந்த மாதிரி விபத்து நடந்து விடும், குழந்தைகளுக்கு எப்போதுமே குதிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும், அந்த ஆவலில் தான் அந்த குழந்தை குதித்ததால் ஏற்பட்ட விபத்து தான் இது.

எதிர்பாராமல் நடந்த விபத்து என்பதை கூட புரிந்து கொள்ளாமல், யாருக்கு வேண்டும் என்றாலும் நடக்கும் என்பதை கூட தெரிந்து கொள்ளாமல், அவர் மீது கடுமையாக விமர்சனம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை பெற்ற எல்லோருக்கும் இந்த கஷ்டம் தெரியும், ஆனாலும் அவர் இன்று எடுத்து தவறான முடிவுக்கு சமூக வலைதள பயனாளிகளின் கடுமையான விமர்சனமே காரணம்.

உண்மையில் இந்த சம்பவம் நடந்தவுடன் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் தான் ஈடுபட்டு இருக்க வேண்டும். பரவாயில்லை ஏதோ தெரியாமல் நடந்து விட்டது, இதுக்காக வருத்தப்பட வேண்டாம், இனிமேல் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்ல வேண்டுமே தவிர உனக்கெல்லாம் குழந்தை தேவையா என்று மோசமாக விமர்சனம் செய்ததன் விளைவு தான் இன்று அந்த குழந்தை ஒரு தாயை இழந்துவிட்டது, இதுபோன்ற நிலையில் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருங்கள்’ என்று நடிகை கல்யாணி வீடியோவில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வருகிறது.

நடிகை கல்யாணி, விஜயகாந்த் நடித்த ‘ரமணா’ படத்தில் அவரிடம் வளரும் குழந்தைகளில் ஒருவராக நடித்துள்ளார் என்பதும், பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.