அம்மாவின் கனவை நனவாக்குவேன்: மறைந்த நடிகையின் மகள் பேட்டி

  • IndiaGlitz, [Friday,December 13 2019]

இயக்குனர் பாக்யராஜ் இயக்கி நடித்த ’சின்ன வீடு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கல்பனா. இவர் பிரபல நடிகை ஊர்வசியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை கல்பனா காலமான நிலையில் அவரது மகள் ஸ்ரீமயி தற்போது ஒரு மலையாள படத்தில் அறிமுகமாகியுள்ளார். விஷுவல் கம்யூனிகேஷன் படித்து வரும் ஸ்ரீமயி, படித்து முடிக்கும் முன்னரே சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: என் தாத்தா, பாட்டி, அம்மா, சித்தி, பெரியம்மா ஆகியோர் அனைவரும் நடிகர் என்றாலும், நான் நடிகையாவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றும், ஏனெனில் எனக்கு மிகுந்த கூச்ச சுபாவம் என்பதால் பள்ளியில் மாறுவேடப் போட்டியில் கலந்து தயங்கியதாகவும் தெரிவித்தார். இருப்பினும் என் அம்மா நான் நடிகை ஆக வேண்டும் என்று விரும்பினார் என்றும் ஆனால் அவர் தனது விருப்பத்தை என்னிடம் சொல்லாமல் எனது பாட்டியிடம் மட்டுமே சொல்லி உள்ளார் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் மறைந்த தனது அம்மாவின் கனவை நனவாக்கும் வகையில் தற்போது சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இந்த சினிமா வாய்ப்பை நான் பயன்படுத்தி சினிமாவில் படிப்படியாக முன்னேறுவேன் என்று கூறியுள்ளார். சினிமாவில் வெற்றி பெறுவது எளிமையானது அல்ல என்றும் கடினமாக உழைப்பவர்களுக்கே வெற்றி கிடைக்கும் என்று தனது பாட்டி கூறியுள்ளதாகவும் அதன்படி நான் அர்ப்பணிப்புடன் உணர்வுடன் உழைத்து சினிமாவில் வெற்றி பெற்று என் அம்மாவின் கனவை நனவாக்குவேன் என்றும் நடிகை ஸ்ரீமயி தெரிவித்துள்ளார்.

More News

'பிகில்' படம் குறித்து அர்ச்சனா அறிவித்துள்ள அசத்தலான அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவான பிகில் திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி

நித்தியானந்தாவின் 'கைலாஷ்' நாட்டிற்கு எஸ்.வி.சேகர் பிரதமரா?

கர்நாடக போலீஸாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் இம்மாதம் 18-ம் தேதிக்குள் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அறிவிக்க வேண்டும்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் டுவிட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது எழுபதாவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய நிலையில் அவருக்கு தமிழ் திரையுலகில் இருந்து மட்டுமன்றி இந்திய திரையுலகினர்களும்

எனக்கும் மோசமாக பேசத்தெரியும்: சீமானுக்கு மீண்டும் ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், யாரையும் வரக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று சீமானை மீண்டும் ராகவா லாரன்ஸ் விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

நித்தியானந்தாவை கண்டுபிடிக்க நீதிமன்றம் கெடு: அதிர்ச்சியில் போலீசார்! 

பெங்களூரு நித்யானந்தா ஆசிரமத்தில் பாலியல் பலாத்காரங்கள் நடப்பதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து போலீசார் இதுபற்றி விசாரணை செய்து வந்தனர்.