இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் காதல் – தி கோர் ஜோதிகாவை பாராட்டிய பிரபல நடிகை..!

  • IndiaGlitz, [Sunday,November 26 2023]

பிரபல மலையாள நடிகர் மம்முட்டியுடன் ஜோதிகா நடித்த “காதல் – தி கோர்” என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பிரபல நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் ஜோதிகாவின் நடிப்பை பாராட்டியுள்ளார்.

’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தின் இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் உருவான திரைப்படம் “காதல் – தி கோர்”. மம்முட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான இந்த படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

அரசு ஊழியரான மம்முட்டி தனது மனைவி ஜோதிகா மற்றும் மகளுடன் வசித்து வரும் நிலையில் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கிறார். ஆனால் சில நாட்களில் அவருக்கு எதிராக அவருடைய மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுகிறார். சில ஆண்டுகளாக தனது கணவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடுகிறார்.

இந்த பிரச்சனையில் இருந்து மம்முட்டி எப்படி மீள்கிறார்? தன்பாலின உணர்வாளர்கள், தங்கள் குடும்பத்தினர்களை எப்படி எதிர்கொள்கின்றனர்? என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை. முதல் முறையாக மம்முட்டி தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிகா மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஜோதிகாவின் நடிப்பை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டியுள்ளார். இந்த ஆண்டின் மிகச்சிறந்த படம் “காதல் – தி கோர்” என்றும் வலுவான மற்றும் அழகான காட்சி அமைப்புகள் உங்களை மேலும் மெருகேற்றி உள்ளது என்றும் மம்முட்டி அவர்கள் மிகச் சிறந்த நாயகன் என்றும் இந்த படத்தில் உங்கள் இருவரின் நடிப்பை பார்த்துவிட்டு என்னால் நீண்ட நேரம் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார்

More News

வனிதா தாக்கப்பட்ட விவகாரம்.. தாமாக முன்வந்து விசாரிக்கும் காவல்துறை..

நடிகை வனிதா நேற்று நள்ளிரவு மர்ம நபர்களால் தாக்கப்பட்டார் என்று தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்த நிலையில் தன்னை தாக்கியவர் பிரதீப் ஆதரவாளராக இருக்கலாம் என்று கூறியிருந்தார்.

த்ரிஷா உள்பட 3 பிரபலங்கள் மீது மானநஷ்ட வழக்கு.. அதில் ஒருவர் சூப்பர் ஸ்டார்.. மன்சூர் அலிகான் அறிவிப்பு..!

 த்ரிஷா உள்பட 3 பேர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ள நிலையில் அதில் ஒருவர் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் வந்தவுடன் விளையாட்டை ஆரம்பித்துவிட்டார்.. ரீஎண்ட்ரி ஆன போட்டியாளர் குறித்து கமல்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவிக்சன் ஆன போட்டியாளர்களில் சிலர் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய எபிசோடில் விஜய் வர்மா மீண்டும் என்ட்ரி ஆகியுள்ளதாக தெரிகிறது.

'கபாலி' நாயகியுடன் கீர்த்தி சுரேஷ்.. உருவாகிறது த்ரில்லர் வெப்தொடர்..!

கபாலி நாயகியுடன் கீர்த்தி சுரேஷ் ஒரு திரில்லர் வெப் தொடரில் நடிக்க இருப்பதாகவும் இந்த தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

என்ன விமர்சனம் செய்ய நீங்க யாரு? கமல் பேச்சால் அதிர்ச்சி அடைந்த மாயா-பூர்ணிமா..!

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய புரமோவில் மாயா மற்றும் பூர்ணிமா பேசியதை கமலஹாசன்  'என்னை விமர்சனம் செய்ய நீங்க யாரு' என்று ஆவேசத்துடன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.