ஒரே ஒரு காட்சிக்காக 14 மணி நேரம் தண்ணீரில் இருந்த கமல், சிவகார்த்திகேயன் பட நடிகை..!

  • IndiaGlitz, [Monday,June 12 2023]

ஒரே ஒரு காட்சிக்காக கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் படத்தில் நடித்து வரும் நடிகை 14 மணி நேரம் தண்ணீரில் இருந்ததாக கூறப்படுவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ ’தேவ்’ ’என்ஜிகே’ உட்பட சில தமிழ் படங்களிலும் தெலுங்கு இந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ மற்றும் சிவகார்த்திகேயனின் ’அயலான்’ படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ’ஐ லவ் யூ’ என்ற தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகும் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படம் ஜியோ சினிமாவில் வரும் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் கூறியபோது ’இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சிக்காக தான் 14 மணி நேரம் தண்ணீரில் நின்றதாக கூறியுள்ளார். தண்ணீரில் இரண்டு நிமிடங்கள் மூச்சை அடக்கியபடி ஒரு காட்சியில் இருக்க வேண்டும் என்றும், இந்த காட்சிக்காக பயிற்சியாளர் ஒருவர் தனக்கு பயிற்சி அளித்ததாகவும் ஒரு மாதமாக தினமும் இந்த பயிற்சியை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மதியம் 2 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை கிட்டத்தட்ட 14 மணிநேரம் தண்ணீருக்குள் இந்த காட்சிக்காக இருந்ததாகவும் கடும் குளிரில் இருந்த நிலையில் ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் வெதுவெதுப்பான நீரை தன் மீது ஊற்றுவார்கள் என்று இந்த காட்சியை நடித்து முடிப்பதில் தனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

More News

ஆர்யா-சாயிஷா குழந்தை என்னமா வளர்ந்துவிட்டது? வைரல் புகைப்படம்..!

தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளான ஆர்யா சாயிஷாவின் குழந்தை நன்றாக வளர்ந்துள்ளது லேட்டஸ்ட் புகைப்படம் மூலம் தெரிய வந்துள்ள நிலையில் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்து

'லியோ' படத்தில் தர லோக்கல் குத்து பாட்டு.. ரசிகர்களுக்கு வேற லெவலில் விருந்து..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றின் படப்பிடிப்பு நடந்தது என்பதை பார்த்தோம்.

ஏஆர் ரஹ்மான் குடும்பத்தில் இருந்து இன்னொரு இசையமைப்பாளர்.. குவியும் வாழ்த்துக்கள்..!

ஏஆர் ரகுமான் குடும்பத்தினர் சிலர் ஏற்கனவே திரையுலகில் புகழ்பெற்றிருக்கும் நிலையில் அவருடைய குடும்பத்தில்  இருந்து புதிதாக ஒருவர் இசையமைப்பாளர் ஆகியுள்ளார். 

சாப்பிட்ட உடனே தூங்கிடறான், இவனெல்லாம் எதுக்கு உயிரோட இருக்கணும்: 'தலைநகரம் 2' டிரைலர்..!

சுந்தர் சி நடித்த 'தலைநகரம்' என்ற திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 17 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

அஜித்தை போலவே பைக் லவ்வராக மாறிய நடிகை மஞ்சு வாரியர்… மிரட்டலான புகைப்படங்கள்!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை மஞ்சு வாரியர் ஒரு பைக் லவ்வராகவே மாறியிருக்கிறார்