திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஹன்சிகா

  • IndiaGlitz, [Wednesday,September 23 2015]

பிரபல நடிகை ஹன்சிகா நடிப்பில் மட்டுமின்றி சமூக சேவை மற்றும் பக்தியிலும் ஈடுபாடு உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தற்போது அவர் 30 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் திருச்செந்தூரில் நடைபெற்ற ஒரு விழாவில் கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயனுடன் கலந்து கொண்ட ஹன்சிகா, அந்த விழா முடிந்தவுடன் தனது தாயார் மோனா மற்றும் சகோதரர் பிரசாந்த் ஆகியோர்களுடன் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகிய திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

திருச்செந்தூர் முருகன் கோவில் நிர்வாகிகளிடம் அவர் ஏற்கனவே தகவல் கொடுத்துவிட்டதால் சிறப்பு பூஜை, ஆறுவிதமான நெய்வேத்யம் ஆகியவற்றில் கலந்து கொண்டார். தான் தத்தெடுத்து வளர்த்து வரும் 30 குழந்தைகளின் நலனுக்காக ஹன்சிகா சுமார் ஐந்துமணி நேர பூஜையில் கலந்து கொண்டு மனமுருக வழிபட்டதாக கூறப்படுகிறது. மேலும் முருகன் முன் சுமார் இரண்டு மணி நேரங்கள் உட்கார்ந்து அவர் தியானம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஹன்சிகா கூறியபோது, திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. அந்த ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. அதுவும் குடும்பத்தினர்களுடன் முருகனை வழிபட்டது மனதுக்கு நிம்மதியாக உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

ஹன்சிகா தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வரும் 'போக்கிரி ராஜா' படப்பிடிப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜீத்-விஜய்யுடன் நடித்த அனுபவங்கள் - ஸ்ரீதேவி

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடித்துள்ளவர் ஸ்ரீதேவி...

விரைவில் 'புலி' படத்தின் 2வது டிரைலர்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகி இந்திய அளவில் அதிக லைக்குகள் பெற்ற டிரைலர் என்பது மட்டுமின்றி பல சாதனைகளை புரிந்தது...

சிவகார்த்திகேயனை நெகிழ வைத்த ரஜினியின் அழைப்பு

கடந்த ஞாயிறு அன்று திருச்செந்தூரில் நடைபெற்ற ஒரு விழாவிற்காக மதுரை சென்ற நடிகர் சிவகார்த்திகேயனை...

சமூக வலைத்தளத்தில் இருந்து சிம்பு திடீர் விலகல். காரணம் என்ன?

நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு பெரும் இடைவெளியில் படங்கள் கொடுத்து கொண்டிருந்தாலும், சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வபோது தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பவர்...

சூர்யாவின் 'பசங்க 2' படத்தை அடுத்து '24' படப்பிடிப்பும் முடிந்தது

'அஞ்சான்', 'மாஸ்' படங்களை அடுத்து சூர்யா ஒரே நேரத்தில் 'பசங்க 2' மற்றும் '24' ஆகிய படங்களில் நடித்து வந்தார்....