முடக்கப்பட்ட கெளதமியின் 6 வங்கிக்கணக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

  • IndiaGlitz, [Thursday,March 24 2022]

விவசாய நிலத்தை விற்பனை செய்த வழக்கில் நடிகை கவுதமியின் 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

நடிகை கெளதமி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில், ‘ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள கோட்டையூர் என்ற பகுதியில் உள்ள விவசாய நிலத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.4.10 கோடிக்கு விற்பனை செய்தேன். அந்த சொத்து வருமான வரிச்சட்டப்படி மூலதன சொத்தின் கீழ் வராது. அந்த சொத்து ரூ.4.10 கோடிக்கு விற்கப்பட்டது. வருமான வரித்துறை கூறியபடி ரூ.11.17 கோடிக்கு விற்கவில்லை.

2016-17 வருமான வரி மதிப்பீட்டு ஆண்டில் ரூ.34.88 லட்சம் வருமானத்தை ஒப்புக்கொண்டதோடு, வட்டியுடன் சேர்த்து 9.14 லட்சத்தை வரியாக செலுத்திவிட்டேன். இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் உள்ள தேசிய வருமான வரி மதிப்பீட்டு மையத்திலிருந்து வந்த கடிதத்தில் ‘விவசாய நிலத்தின் வருவாய் ரூ.11.17 கோடி என கருதி மதிப்பீட்டு ஆணை அனுப்பப்பட்டுள்ளது. அந்த உத்தரவைத் தொடர்ந்து எனது ஆறு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. எனவே வங்கி கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும் என நடிகை கெளதமி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது மூலதன ஆதாய வரியில் 25 சதவீதம் செலுத்திய பிறகு நடிகை கெளதமியின் முடக்கப்பட்ட 6 கணக்குகளை விடுவிக்கும்படி வருமான வரித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

More News

திரைப்படமாகும் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு: இயக்குனர் யார் தெரியுமா?

முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த ஆனந்த கண்ணன் பிறந்த நாளில் மனைவியின் நெகிழ்ச்சியான பதிவு!

சன் டிவியில் ஆங்கராக இருந்த ஆனந்த கண்ணன் சமீபத்தில் புற்றுநோயால் மறைந்த நிலையில் அவருடைய பிறந்த நாளில் அவருடைய மனைவி நெகிழ்ச்சியான பதிவு செய்துவிள்ளது இணையதளங்களில் வைரலாகி வருகிறது .

சிஎஸ்கே கேப்டன் பதவி: தோனி எடுத்த அதிரடி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வரும் தோனி, இந்த ஆண்டும் அணியில் இடம் பெற்றதை அடுத்து அவர் தான் கேப்டனாக செயல்படுவார்

சமந்தாவுக்கு டஃப் கொடுக்கும் தமன்னா: 4 நிமிட ஐட்டம் பாடலின் வீடியோ வைரல்!

கடந்த சில ஆண்டுகளாக முன்னணி நடிகைகள் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆட தொடங்கி விட்டார்கள் என்பதையும் குறிப்பாக புஷ்பா திரைப்படத்தில் சமந்தா, ஆச்சார்யா திரைப்படத்தில் ரெஜினா,

செல்வராகவனை மனவலியுடன் தான் பிரிந்தேன்: சோனியா அகர்வாலின் அதிர்ச்சி பேட்டி!

இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்த நான்கு ஆண்டுகளில் விவாகரத்து செய்த நடிகை சோனியா அகர்வால் அவரை மிகுந்த மன வலியுடன் தான் பிரிந்தேன் என சமீபத்தில் பேட்டி அளித்திருப்பது