தேசியகீதம் குறித்து நடிகை கவுதமியின் கருத்து

  • IndiaGlitz, [Wednesday,October 25 2017]

திரையரங்குகளில் தேசிய கீதம் ஒளிபரப்புவது கட்டாயம் என்பது தேவையா? தேசிய கீதம் ஒளிபரப்பும்போது எழுந்து நிற்க வேண்டியது அவசியமா? என்று நீதிமன்றம் முதல் பல இடங்களில் விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது.

இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், 'நாட்டுப்பற்றை நாட்டு மக்களிடையே உத்தரவுகள் மூலம் கற்பிக்க முடியாது, திரையரங்குகளில் தேசியகீதம் ஒளிபரப்பும்போது எழுந்து நிற்காதவர்களுக்கு நாட்டுப்பற்று குறைவு என்று கருத முடியாது என்றும், இதுகுறித்து மக்களுக்கு கொள்கையை போதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளனர்.

இந்த விஷயத்தில் நடிகர் கமல்ஹாசன் கூட நேற்று இரவு தனது டுவிட்டரில், 'எனது தேசப்பற்றை சோதிக்க எல்லா இடங்களிலும் தேசிய கீதத்தை பாடச் சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம்' என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நடிகை கவுதமி இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியபோது, 'தேசியகீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்பது நமது கடமை. நம்முடைய பாதுகாப்பிற்காக இரவும் பகலும் பாடுபடும் நமது ராணுவ வீரர்களுக்கும் நமது நாட்டிற்கும் நாம் செய்யும் மரியாதை இது' என்று கூறியுள்ளார்.

More News

சிங்கப்பூரை போல இந்தியாவிலும் பின்பற்றலாம்: கமல்ஹாசன்

ஒவ்வொரு நாளும் நள்ளிரவு நேரத்தில் சிங்கப்பூரில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. நமது நாட்டின் டிடி தொலைக்காட்சியிலும் அதேபோல் செய்யலாம்.

நடிகை அசினுக்கு கிடைத்த பெருமைக்குரிய புரமோஷன்

அஜித், விஜய், சூர்யா உள்பட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை அசின் திருமணத்திற்கு பின் நடிப்புலகில் இருந்து விலகி இல்லற வாழ்க்கையில் மட்டும் ஈடுபட்ட அசினுக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

வேலைக்காரன்' படத்தின் 2வது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கியுள்ள 'வேலைக்காரன்' திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'கருத்தவனெல்லாம் கஜிலாம்'

விஜய் அந்த இடத்தை நிச்சயம் பிடிப்பார்: கோவை சரளா

தளபதி விஜய் நடித்த 'மெர்சல் திரைப்படம் தமிழக அரசியலை ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் சிறு வேடமாக இருந்தாலும் சிறப்பான வேடத்தில் நடித்தவர் கோவை சரளா.

'மெர்சல்' உதவியால் ஓபிஎஸ்-க்கு ஆப்பு வைத்த தினகரன் ஆதரவாளர்

தளபதி விஜய்யின் 'மெர்சல் திரைப்படம் தான் கடந்த ஐந்து நாட்களாக இந்தியாவின் தேசிய செய்தியாக இருந்து வருகிறது. கமல், ரஜினியை அடுத்து மெர்சல் மூலம் விஜய்யும் இந்திய அளவிலான ஸ்டாராக மாறிவிட்டார்.