அமெரிக்க காட்டுத்தீயில் சிக்கி கொண்ட தனுஷ்-சிம்பு நடிகை!

  • IndiaGlitz, [Sunday,September 13 2020]

உலகிலேயே மிக அதிகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கு மேலும் ஒரு சோதனையாக காட்டுத்தீ வடிவில் வந்துள்ளது. இந்த காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவில் உள்ள போர்ட்லேண்ட் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீ மிக வேகமாக பரவி வருவதை அடுத்து போர்ட்லாண்ட் மேயர் அவசரநிலையை பிரகடனப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ் நடித்த ’மயக்கம் என்ன’ சிம்பு நடித்த ’ஒஸ்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரிச்சா கங்கோபாத்யா, ஜோ என்பவரை காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்க்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் அவர் கணவருடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்காவில் காட்டுத்தீ பரவி வரும் போர்ட்லாண்ட் பகுதியில் தான் ரிச்சா தனது கணவருடன் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்குள்ளும் புகை வந்து விட்டதால் மூச்சு விடக் கூட சிரமமாக இருப்பதாக அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘காற்றின் தரம் இங்கு மிக மோசமாக உள்ளது. வீட்டுக்குள்ளேயே புகை வந்து விட்டதால் மூச்சு விடக்கூட முடியாத நிலை உள்ளது. மேலும் அனைத்து கடைகளிலும் ஏர் பியூரிஃபையர் விற்று தீர்ந்து விட்டதால் பெரும் தலைவலியுடன் நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்’என்று பதிவு செய்துள்ளார்.

More News

மாநில அரசுக்கு எதிராக கவர்னரிடம் புகார் கொடுத்த பிரபல நடிகை: பரபரப்பு தகவல் 

கடந்த சில நாட்களாக மகாராஷ்டிர அரசுக்கும் பிரபல நடிகை கங்கனா ரனாவத்துக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வருவது தெரிந்ததே. மகாராஷ்டிரா மாநில அரசை கங்கனா கடுமையாக விமர்சனம்

'இந்தி தெரியாது போடா': கன்னட மொழியில் டீசர்ட் அணிந்த பிரகாஷ்ராஜ்

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்பட ஒருசில திரை உலக பிரபலங்கள் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன் 'ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்' மற்றும் 'இந்தி தெரியாது போடா'

விஜய் தேவரகொண்டா விடுத்த எச்சரிக்கை: திரையுலகில் பரபரப்பு

பிரபல தமிழ், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தரப்பில் இருந்து தயாரிப்பாளர் தரப்புக்கு திடீரென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நான் பாஜகவில் இணைகின்றேனா? விஷால் விளக்கம்

நடிகர் விஷால் பாஜகவில் இணைய இருப்பதாகவும் அவர் விரைவில் பாஜக தமிழக தலைவர் எல் முருகன் அவர்களை சந்திக்க இருப்பதாகவும் கடந்த சில மணி நேரங்களாக சமூக வலைதளங்கள் மற்றும் ஒரு சில இணையதளங்களில்

தாலி, மெட்டியை கழட்டிவிட்டு நீட் தேர்வு எழுதிய புதுமணப்பெண்: நெல்லையில் பரபரப்பு

தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. கடும் சோதனைக்கு பின்னர் இன்று மதியம் 2 மணிக்கு மாணவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்