பாடகி சுசித்ரா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த பிரபல நடிகை.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Saturday,September 21 2024]

பாடகி சுசித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும், அந்த வீடியோக்களில் பழம்பெரும் திரையுலக பிரபலங்கள் முதல், தற்போதைய பிரபலங்கள் வரை குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக, இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் குறித்து அவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு இயக்குனர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. அதேபோல், மணிமேகலை, பிரியங்கா விவகாரங்களிலும் அவர் சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை தெரிவித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், பிரபல நடிகை ரீமா கல்லிங்கல் மீதும் அவர் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். நடிகை ரீமா கல்லிங்கல் போதை மருந்து விருந்து நடத்தியதாகவும், அதில் இளம் பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டதாகவும், இந்த விருந்து காரணமாக தான் அவரது சினிமா வாழ்க்கை வீழ்ச்சி அடைந்ததாகவும் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள நடிகை நடிகை ரீமா கல்லிங்கல் , தற்போது தன் மீது ஆதாரம் இல்லாத புகார் கூறிய சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொச்சி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை கொச்சி துணை கமிஷனரிடம் ஆன்லைன் மூலமாக அளித்த நிலையில், இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு எர்ணாகுளம் போலீஸ் உதவி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து, எர்ணாகுளம் போலீஸ் பாடகி சுசித்ராவை விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

சுயநலவாதிகள்.. விவாகரத்து செய்பவர்கள் குறித்து நடிகை குஷ்புவின் சாட்டையடி பதிவு..!

திரை உலகில் விவாகரத்து செய்யும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமீபகாலமாக தனுஷ், ஜிவி பிரகாஷ், ஜெயம் ரவி உள்ளிட்டோர்

'கூலி' 'ஜெயிலர் 2' படங்களை அடுத்து ரஜினியின் அடுத்த படம்.. இயக்குவது இந்த பிரபலமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது "வேட்டையன்" என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த 'மாஸ்டர்' வில்லன் நடிகர்..!

அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்த வில்லன் நடிகர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

புரட்டாசி மாத சிறப்புகள் மற்றும் வழிபாடு

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதத்திற்கு தனி சிறப்பு உண்டு. இம்மாதம் தெய்வீக சக்தி மிகுந்த மாதமாகக் கருதப்படுகிறது. காலநிலை மாற்றம் ஏற்படும் இந்த மாதத்தில், தெய்வ சிந்தனையில் ஆழ்ந்து,

கமல்ஹாசனின் 'தக்லைஃப்' படப்பிடிப்பில் சுதா கொங்காரா.. வைரல் புகைப்படங்கள்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக இயக்குனர் சுதா கொங்கரா தனது சமூக வலைத்தளத்தில்