ரூ.6 கோடி கேட்டு மிரட்டியதாக தயாரிப்பாளர் புகார்.. அவதூறு வழக்கு தொடர்ந்த  பிரபல நடிகை..!

  • IndiaGlitz, [Monday,June 17 2024]

நடிகை தன்னிடம் ஆறு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ள நிலையில் அவர் மீது நடிகை அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஹரிஷ் கல்யாண் நடித்த ’தனுசு ராசி நேயர்களே’ படத்தில் நடித்த திகங்கனா சூர்யவன்ஷி என்பவர் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் 'ஷோ ஸ்டாப்பர்' என்ற வெப் தொடரில் இவர் நடித்துள்ள நிலையில் இந்த வெப் தொடரில் பிரபல பாலிவுட் நடிகை ஜீனத் அமன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த வெப்தொடரை மணிஷ் ஹரிசங்கர் என்பவர் தயாரித்து இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் இந்த வெப் தொடரை விளம்பரப்படுத்துவதற்காக நடிகர் அக்சயகுமார் இடம் தான் பேசுவதாகவும் அதற்காக அக்ஷய் குமாருக்கு 6 கோடியும் தனக்கு 75 லட்சம் வேண்டும் என்று திகங்கனா தயாரிப்பாளரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை தயாரிப்பாளர் , இயக்குனர் மணிஷ் ஹரிசங்கர் கூறிய நிலையில் அவர் மீது திகங்கனா அவதூறு வழக்கு பதிவு செய்ய உள்ளார் . இது குறித்து காவல் துறையில் அவர் 11 பிரிவுகளின் மணிஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து திகங்கனா மேலும் கூறிய போது ’தான் பணம் கேட்டு மிரட்டியதாக மணிஷ் கூறிய அனைத்தும் பொய் என்றும் வெப் தொடர் உருவாகி இரண்டு வருடம் ஆகியும் விற்பனை ஆகவில்லை என்பதால் விளம்பரத்திற்காக தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்துகிறார் என்றும் இதைப் பற்றி விளக்கம் அளித்து எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’ என்றும் கூறியுள்ளார்.

 

More News

அதிகாலையில் திருப்பதிக்கு வந்த அஜித்.. ரசிகர் கொடுத்த மறக்க முடியாத பரிசு..!

இன்று அதிகாலை நடிகர் அஜித் திருப்பதி வந்த நிலையில் அவருக்கு ரசிகர் ஒருவர் கொடுத்த பரிசு மறக்க முடியாததாக இருக்கும் என கருதப்படுகிறது.

பாரம்பரிய ஜோதிடத்தின் பலன்களும் பரிகாரங்களும் -ஆன்மீகக்ளிட்ஸில் ஜோதிடர் மைதிலி விளக்கம்

பாரம்பரிய ஜோதிடம் பற்றிய பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில், பிரபல ஜோதிடர் மைதிலி அவர்கள் ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'டபுள் டக்கர்' தீரஜின் 'பிள்ளையார் சுழி' திரைப்படம்.. ரிலீஸ் எப்போது?

"டபுள் டக்கர்" படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தீரஜ் தன் அடுத்த படமான "பிள்ளையார் சுழி" மூலம் மீண்டும் பார்வையாளர்களை கவர தயாராக உள்ளார்.

அல்லு அர்ஜூன் படம் டிராப்? மீண்டும் பாலிவுட் செல்லும் அட்லி.. இவர் தான் ஹீரோவா?

இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த படம் டிராப் செய்யப்பட்டதாக கூறப்படும்

வீட்ல ஃபேன் கூட இல்லை.. ஆனால் நியூயார்க் தெருக்களில் காற்று வாங்கும் மாயா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான மாயா, நியூயார்க் தெருக்களில் நடந்து செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்