close
Choose your channels

லாரியை பல கிமீ துரத்தி பிடித்த பிரபல நடிகை: சினிமா பாணியில் ஒரு நிஜ சேஸிங்!

Wednesday, September 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சினிமா பாணியில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை பிரபல நடிகை ஒருவர் தனது காரில் துரத்திச் சென்று பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'அழகிய தீயே' என்ற தமிழ் படத்தில் நடித்த நடிகை நவ்யா நாயர், அதன் பிறகு 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி', 'பாசக்கிளிகள்', 'மாயக்கண்ணாடி', 'சில நேரங்களில்', 'ஆடும் கூத்து', 'ரசிக்கும் சீமானே' உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை நவ்யா நாயர் சமீபத்தில் ஆலப்புழா மாவட்டம் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது, தனது முன்னால் சென்ற லாரி சைக்கிளில் சென்றவரை மோதியதும், நிற்காமல் சென்றதை கவனித்தார்.

உடனடியாக லாரியை பல கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்ற நவ்யா நாயர், ஒரு கட்டத்தில் லாரியை நிறுத்தச் செய்தார். அதன்பின், அவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்க, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்; மேலும், லாரியையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், லாரி மோதியதில் படுகாயம் அடைந்த சைக்கிள் ஓட்டுனருக்கு போலீசார் உடனடி மருத்துவ உதவி வழங்கினர். பல கிலோமீட்டர் தூரம் விபத்தை ஏற்படுத்திய லாரியை சினிமா பாணியில் துரத்தி சென்ற நவ்யா நாயருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment