வயது 31 தான்.. அதற்குள் 13வது திருமண நாளை கொண்டாடும் நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Monday,July 08 2024]

30 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகைகள் இருக்கும் திரை உலகில் 31 வயதில் 13வது திருமண நாளை கொண்டாடிய நடிகை, அது குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ’அவள் பெயர் தமிழரசி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வித்யா பிரதீப். அதன்பின் ’விருந்தாளி’ ’சைவம்’ ’பசங்க 2’ ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ’மாரி 2’ உள்பட பல படங்களில் நடித்தார். குறிப்பாக இவர் ’தடம்’ என்ற திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் என்பதும் அந்த படம் அவரது அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ திரைப்படத்தில் நடிகை கேரக்டரில் நடித்திருப்பார். கடந்த ஆண்டு கூட இவரது நடிப்பில் ஆறு திரைப்படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை வித்யா பிரதீப் 18 வயதிலேயே புகைப்படக் கலைஞர் பிரதீப் மைக்கேல் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது 13வது திருமண நாள் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த 13 வருடங்களில் என் வாழ்க்கையில் நீங்கள் தந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் போதாது. எண்ணற்ற நினைவுகளை உருவாக்கியுள்ளோம். நீங்கள் எப்பொழுதும் எனக்காக இருந்திருக்கிறீர்கள், என்னை முழுமையாக உணர செய்தீர்கள். உங்கள் அன்பு என்னை அளவு கடந்த செல்வந்தராக உணர வைக்கிறது.

நீங்கள் எப்போதும் என் முகத்தில் ஒரு புன்னகையை கொண்டு வருகிறீர்கள், என் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கின்றீர்கள், என் கண்ணீரைத் துடைக்கிறீர்கள். நான் பேசுவதற்கு முன்பே, எனக்கு என்ன தேவை என்பதை கண்டுபிடிக்க உங்களுக்கு தெரியும். நீங்கள் என்னை ஒரு குழந்தையைப் போல கவனித்து கொள்கிறார்கள். இந்த 13 அழகான வருடங்களுக்கும், இன்னும் பல வருடங்களுக்கும் கடவுளுக்கு நன்றி’ என பதிவு செய்துள்ளார்.

 

More News

'புஷ்பா' என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? மீண்டும் விலைமாது கேரக்டரில் அஞ்சலி..!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் அஞ்சலி மீண்டும் விலைமாது கேரக்டரில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயங்கள்.. நடிகை அன்னாபென் பகிர்ந்த அதிர்ச்சி புகைப்படங்கள்..!

சமீபத்தில் வெளியான திரைப்படத்தில் நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் இந்த படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து நடிகை அன்னாபென்

நடிப்பு பயிற்சியாளர் ஆகிறார் தமிழ் சீனியர் நடிகர்.. அதிலும் எஸ்.எஸ்.ராஜமெளலி படத்திற்கா?

கோலிவுட் திரை உலகை சேர்ந்த சீனியர் நடிகர் நடிப்பு பயிற்சியாளராகிறார் என்றும் அவர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில்

நீச்சல் குளத்தில் ஹாயாக ஒரு குளியல்.. 45 வயது விஜய், சூர்யா பட நாயகியின் போட்டோஷூட்..!

விஜய், சூர்யா படங்களில் நாயகியாக நடித்த 45 வயது நடிகை நீச்சல் குளத்தில் ஹாயாக குளிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில்

திரையுலகில் இருந்து விலக போகிறேன்.. திடீர் அறிவிப்பை வெளியிட்ட துஷாரா விஜயன்.. என்ன காரணம்?

இன்னும் சில ஆண்டுகளில் திரை உலகில் இருந்து விலகப் போகிறேன் என நடிகை துஷாரா விஜயன் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.