நடிகை அபர்ணாவின் தற்கொலைக்கு ரகசிய உறவு தான் காரணமா? விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,September 06 2023]

கடந்த சில நாட்களுக்கு முன்னால் பிரபல மலையாள நடிகை அபர்ணா தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் அபர்ணா வசித்து வந்த நிலையில் அவரது திடீர் மறைவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த மரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வந்த போது அபர்ணா கணவர் சஞ்சித் என்பவருக்கும் அபர்ணா தங்கை ஆகிய இருவருக்கும் ரகசிய உறவு இருந்ததாகவும் இந்த உறவு அபர்ணாவுக்கு தெரியவந்ததை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் இந்த புகாரின் அடிப்படையில் சஞ்சித் கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

சிறையில் இருந்து வெளியே வந்த சஞ்சித், அபர்ணாவை போதையில் வரம்பு மீறி பேசியதாகவும் ஒரு கட்டத்தில் நீ சினிமாவில் நடிக்க கூடாது என்று கணவர் தடை போட்ட நிலையில் அபர்ணா, மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சஞ்சித் கொடுமைப்படுத்தியதன் காரணமாகத்தான் அபர்ணா, தற்கொலை செய்து கொண்டார் என்று அபர்ணாவின் தாயார் குற்றம் சாட்டி இருப்பதை அடுத்து போலீசார் சஞ்சித் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் சஞ்சித் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் நாங்கள் மகிழ்ச்சியாக தான் இருந்தோம் என்று விசாரணையில் கூறியுள்ளார்.

அபர்ணாவின் தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் தங்கையின் ரகசிய உறவு தான் காரணமா? என்பது விசாரணை முடிவில் தான் தெரியவரும்.