படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயங்கள்.. நடிகை அன்னாபென் பகிர்ந்த அதிர்ச்சி புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Monday,July 08 2024]

சமீபத்தில் வெளியான திரைப்படத்தில் நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் இந்த படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து நடிகை அன்னாபென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

சமீபத்தில் வெளியான பிரபாஸ் நடித்த ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 900 கோடி ரூபாய் வசூல் செய்துவிட்டதாகவும் விரைவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை அடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தவர்கள் கூட படம் வெளியான பிறகு அகில இந்திய அளவில் பிரபலமாகி இருக்கும் நிலையில் இந்த படத்தில் கைரா என்ற கேரக்டரில் நடிகை அன்னாபென் நடித்திருந்தார். சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் அவரது நடிப்புக்கு இந்திய அளவில் கவனம் கிடைத்துள்ளதால் அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கைரா என்ற கேரக்டர் என்னை தேடி வந்த போது நான் மறுக்காமல் உடனே ஒப்புக் கொண்டேன். இது என் திரை உலக வாழ்க்கையில் ஒரு முக்கிய கேரக்டராக இருக்கும் என்பதை அப்போதே நான் அறிந்தேன். இயக்குனர் நாக் அஸ்வின் அவர்களுக்குத்தான் எனது அனைத்து நன்றிகளும். இந்தியாவின் பிரமாண்டமான படம் ஒன்றை அவர் இயக்கி முடித்து விட்டது பெரும் சாதனைதான்.

இந்திய திரை உலகில் உள்ள மிகப்பெரிய நட்சத்திரங்கள் இடையே என்னையும் ஒரு சிறு கேரக்டருக்கு அவர் தேர்வு செய்துள்ளார், இந்த பயணத்தில் நான் இருந்ததை ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். எனக்கு கொடுத்த இடத்தை தொடர்ந்து தக்க வைப்பதற்கு கடினமாக உழைப்பேன். இந்த படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை, இப்போதும் நான் திகைப்பில் இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் இந்த படத்தில் நடிக்கும் போது படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் குறித்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியுடன் அந்த காயத்தை பார்த்து கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

நடிப்பு பயிற்சியாளர் ஆகிறார் தமிழ் சீனியர் நடிகர்.. அதிலும் எஸ்.எஸ்.ராஜமெளலி படத்திற்கா?

கோலிவுட் திரை உலகை சேர்ந்த சீனியர் நடிகர் நடிப்பு பயிற்சியாளராகிறார் என்றும் அவர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில்

நீச்சல் குளத்தில் ஹாயாக ஒரு குளியல்.. 45 வயது விஜய், சூர்யா பட நாயகியின் போட்டோஷூட்..!

விஜய், சூர்யா படங்களில் நாயகியாக நடித்த 45 வயது நடிகை நீச்சல் குளத்தில் ஹாயாக குளிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில்

திரையுலகில் இருந்து விலக போகிறேன்.. திடீர் அறிவிப்பை வெளியிட்ட துஷாரா விஜயன்.. என்ன காரணம்?

இன்னும் சில ஆண்டுகளில் திரை உலகில் இருந்து விலகப் போகிறேன் என நடிகை துஷாரா விஜயன் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5 மொழிகளில் வெளியாகிறது 'மகாராஜா'.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

யோகி பாபு ஹீரோவாக நடித்த 'போட்' திரைப்படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவன் 9 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கியுள்ள 'போட்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.