நடிகை அஞ்சலியின் புஷ்பாவுக்கு பெருகி வரும் ஆதரவு.. 3 நாட்களில் 35 மில்லியனா?

  • IndiaGlitz, [Saturday,July 27 2024]

நடிகை அஞ்சலி, புஷ்பா என்ற விலைமாது கேரக்டரில் ஒரு வெப் தொடரில் நடித்திருந்த நிலையில் இந்த வெப் தொடருக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளதை அடுத்து அவர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகை அஞ்சலி ’பஹிஷ்கரன்’ என்ற தெலுங்கு வெப் தொடரில் புஷ்பா என்ற விலைமாது கேரக்டரில் நடித்திருந்த நிலையில் இந்த தொடர் சமீபத்தில் வெளியானது. ஏற்கனவே அவர் ’கேங்ஸ் ஆப் கோதாவரி’ என்ற படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்திருந்த நிலையில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து விலைமாது கேரக்டரில் நடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ’பஹிஷ்கரன்’ தொடர் வெளியாகி 3 நாட்களில் 35 மில்லியன் பார்வையாளர்கள் பெற்றுள்ளதாக நடிகை அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

ஜி5 ஓடிடியில் 3 நாளில் 35 மில்லியன் என்பது சாதாரண விஷயம் இல்லை, புஷ்பாவாக நடிப்பதும் சவால் ஆனது, எனக்கு அந்த சவால் மிகவும் பிடித்திருந்தது, எங்கள் கதைக்கு நீங்கள் ஆதரவு கொடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி. நீங்கள் தரும் ஆதரவு என்னை மேலும் புதிய கேரக்டர்களின் நடிக்க தூண்டும் வகையில் இருக்கும். மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

நடிகை அஞ்சலி தற்போது ’ஈகை’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் அவருடைய 50வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஷங்கரின் ’கேம் சேஞ்சர்’ ராமின் ’ஏழு கடல் ஏழு மலை’ ஆகிய படங்களிலும் அஞ்சலி நடித்துள்ளார் என்பதும் இந்த படங்களும் விரைவில் வெளியாக உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

More News

பெண்களிடம் அத்துமீறினாரா தமிழ் நடிகர்.. பாடகி சின்மயி பகீர் குற்றச்சாட்டு..!

தமிழ் நடிகர் ஒருவர் பெண்களிடம் அத்துமீறியதாக பாடகி சின்மயி குற்றச்சாட்டு கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திடீரென மன்னிப்பு கேட்ட சுதா கொங்கரா.. மன்னிப்பு கேட்கும் அளவுக்கு என்ன செய்தார்?

இயக்குனர் சுதா கொங்கரா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த கருத்துக்காக மன்னிப்பு கேட்பதாக அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

படம் தயாரிக்காத வெற்று தயாரிப்பாளர்களே.. முடிந்தால் என்னை தடுத்து பாருங்கள்: விஷால் பதிலடி..!

நடிகர் விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்தை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியான நிலையில் சில மணி நேரத்தில்

கல்லூரி விழாவில் கலந்து கொண்டபோது ஆபாச உடையா?  பதிலடி கொடுத்த அமலாபால்..!

நடிகை அமலாபால் சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட போது குட்டையான ஆபாச உடை அணிந்ததாக நெட்டிசன்கள் குற்றச்சாட்டு கூறிய நிலையில் அதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

தனுஷின் 'ராயன்' படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? 'மகாராஜா'வை முந்துமா?

தனுஷ் நடித்த இயக்கிய 'ராயன்' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் நேற்றைய முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.