10 நாளுக்கு முன் பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்து இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய தமிழ் நடிகை!


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த 10 நாட்களுக்கு முன் பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்து அந்த குழந்தையின் பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை தமிழ் நடிகை ஒருவர் ஆரம்பித்துள்ளார்.
‘வருஷமெல்லாம் வசந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனிதா. அதன் பின்னர் அவர் விக்ரமின் ’சாமுராய்’ உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களிலும் ஒரு சில ஹிந்தி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு ரோகித் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்ட அனிதாவுக்கு பிப்ரவரி 9ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு தற்போது அவர் ஆரவ் ரெட்டி என்ற பெயரை வைத்துள்ளார். இது குறித்த ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார் அவர் ஆரவ் ரெட்டி என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய பக்கத்தையும் அவர் ஆரம்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குழந்தையின் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments