close
Choose your channels

இந்தியாவில் இப்படியெல்லாம் அழகான இடங்கள் இருக்கிறதா? ஆண்ட்ரியாவின் அசத்தல் புகைப்படங்கள்..!

Monday, June 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஆண்ட்ரியா சிக்கிம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் ’இந்தியாவில் இப்படி எல்லாம் அழகான இடங்கள் உள்ளதா? என ரசிகர்களின் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

நடிகை நயன்தாரா உள்பட பல நடிகைகள் தற்போது கோடை காலம் என்பதால் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் நிலையில் நடிகை ஆண்ட்ரியா வித்தியாசமாக வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்திற்கு சென்று உள்ளார்.

அங்கு உள்ள இயற்கை எழில் கொஞ்சம் இடங்களில் அவர் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் ’இவ்வளவு அழகான இடங்கள் நமது இந்தியாவில் இருக்கிறதா’ என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்த பதிவில் ஆண்ட்ரியா ’சிக்கிம் மாநிலத்தில் இதுவரை நாங்கள் பார்த்தது ஒரு பெரிய சாகசமாகவே உள்ளது. காங்டாக்கிலிருந்து லாச்சுங்கிற்குச் செல்ல திட்டமிட்டோம். ஆனால் அங்கு நிலச்சரிவு காரணமாக செல்ல முடியவில்லை. அதற்கு பதிலாக தற்போது லாச்சுங்கிற்கு சென்றோம். அது எனக்கு மிகவும் பிடித்த இடமாகும்.

வழக்கமான சுற்றுலா தளங்களை போல் இல்லாமல் மிகவும் அழகாக, அதே நேரத்தில் அமைதியான சில இடங்களை நாங்கள் பார்வையிட்டோம். அதன்பின்னர் பெல்லிங்கிற்கு சென்றோம். அடுத்ததாக டார்ஜிலிங் செல்ல திட்டமிட்டு உள்ளோம். அங்கு என்ன இருக்கிறது என்று பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா ’பிசாசு 2’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக கோபி நயினார் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மனுசி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை அடுத்து கவின் நடிப்பில், நெல்சன் தயாரிப்பில் உருவாகும் ’மாஸ்க்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.