பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு கார் கொடுத்து உதவிய தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Wednesday,March 25 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை ரோஜா. இவர் தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி தொகுதி எம்.எல்.ஏஆகவும் உள்ளார்.

இந்த நிலையில் பிரசவ வலியால் துடித்த கா்ப்பிணி ஒருவரை காப்பாற்ற நடிகையும் எம்.எல்.ஏவுமான ரோஜா தனது காரை கொடுத்து உதவி அவர் மருத்துவமனைக்கு செல்ல உதவியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பெரும் பதட்டத்தில் இருக்கும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள நகரி தொகுதிக்கு கடந்த திங்களன்று அரசு மருத்துவமனைக்கு ரோஜா சென்றார். அப்போது அங்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க அந்த மருத்துவமனையில் வசதி இல்லை என்பதை அறிந்தார்.

உடனே தன்னுடைய காரை கொடுத்து உடனே அவரை திருப்பதி மகளிர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்களை அறிவுறுத்தினார். ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு தன்னுடைய காரை கொடுத்து அனுப்பிய நடிகையும் எம்.எல்.ஏவுமான ரோஜாவுக்கு அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

More News

கொரோனா தாக்கியதால் சுவை, வாசனை திறனை இழந்த பிரபல பாடகர்: அதிர்ச்சி தகவல் 

உலகமெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரஸ் ஏழை முதல் பணக்காரர் வரை அனைத்து தரப்பினரையும்

கொரோனா பாதிப்பை மறைத்த தெலுங்கானா டிஎஸ்பி: மகனையும் தாக்கியதால் பரபரப்பு

தெலுங்கானா மாநில காவல்துறை டிஎஸ்பி ஒருவருக்கும் அவருடைய மகனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு போட்டும் திருந்தாத டெல்லி மக்கள்: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார்.

ராணுவத்தை அழைப்பேன், வெளியே நடமாடினால் கண்டதும் சுட உத்தரவு: முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்

நேற்று நள்ளிரவு முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவை அனைத்து இந்திய மக்களும் தவறாது கடைபிடிக்க வேண்டும்

அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்: கமல்ஹாசன்

கொரோனா வைரசுக்கு எதிராக உலகமே தற்போது பெரும் போராட்டம் நடத்தி வருகிறது. ஒவ்வொரு நாட்டு அரசும் கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பது எப்படி என்று புரியாமல் தவித்து வருகிறது