ஆந்திரா தாய்வீடு, தமிழ்நாடு மாமியார் வீடு: அமைச்சர் ரோஜா பேட்டி!

  • IndiaGlitz, [Saturday,April 16 2022]

ஆந்திரா எனது தாய் வீடு என்றும் தமிழ்நாடு எனது மாமியார் வீடு என்றும் நடிகையும் அமைச்சருமான ரோஜா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது நடிகை ரோஜா இளைஞர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்றார். இந்த நிலையில் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த அமைச்சர் ரோஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நான் நடிகையாக இருக்கும் போதும் சரி, எம்எல்ஏவாக இருக்கும் போதும் சரி, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் வந்து தரிசனம் செய்வேன். நான் நடித்த முதல் படம் முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் காமாட்சி அம்மனை தரிசனம் செய்யாமல் எந்த வேலையையும் செய்ய மாட்டேன்.

எனது தாய் வீடான ஆந்திர மக்களுக்கும், எனது மாமியார் வீடான தமிழக மக்களுக்கும், நான் அமைச்சராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அமைச்சர் ரோஜா கூறியுள்ளார். காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் ரோஜாவுடன் பொதுமக்கள் பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.