திடீர் திருமணத்திற்கு காரணம் என்ன? மனம் திறந்த ஆனந்தி!

  • IndiaGlitz, [Sunday,January 10 2021]

பிரபுசாலமன் இயக்கிய ’கயல்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் ’சண்டிவீரன்’ ’பொறியாளன்’ ’த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ ’விசாரணை’ ’பரியேறும் பெருமாள்’ ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஆனந்தி. தற்போது இவர் ’டைட்டானிக் காதலும் கடந்து போகும்’ ’அலாவுதீனும் அற்புத கேமரா’ ’ராவண கூட்டம்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஆனந்தி இணை இயக்குனர் சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மணமகன் சாக்ரடீஸ் இயக்குனர் நவீன் மனைவியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருமணம் குறித்து நடிகை ஆனந்தி கூறிய போது ’நானும் சாக்ரடீஸூம் நான்கு வருடங்களாக காதலித்து வந்தோம். எங்கள் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டியதை அடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். அதன்படி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம்.

திருமணத்திற்குப் பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். அதற்கு என் கணவரும் ஏற்கனவே சம்மதம் தெரிவித்து உள்ளார். தற்போது நான் நான்கு படங்களில் நடித்து வருகிறேன். அந்த படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு புதிய படங்கள் வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன்’ என்று கூறியுள்ளார். நடிகை ஆனந்தியின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.

More News

சீரியல் நடிகையின் புதிய போட்டோஷூட்! இணையத்தில் வைரல்!

கமலஹாசனின் 'தேவர்மகன்', சேரனின் 'பாண்டவர் பூமி' உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் அதன் பின்னர் 'மொழி' 'சந்தோஷ் சுப்பிரமணியம்' 'வாலிபராஜா' 'மன்னார் வகையறா' 'கஜினிகாந்த்'

பிறந்த நாளில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த பட டைட்டில்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சிவகார்த்திகேயனின் 'கனா' படத்திற்கு பிறகு நாயகிக்கு

ஆஸ்திரேலியா மைதானம் வரை சென்ற ஆரியின் டைட்டில் வின்னர் பதாகை!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 98 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் முதல் மூன்று வாரம் முடிந்த பின்னர் ஆரி தான் டைட்டில் வின்னர் என்பது கிட்டத்தட்ட தெரிந்து விட்டது.

கமல் சொன்னதை கேட்டு உணர்ச்சிவசப்பட்டு கதறியழுத பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 97 நாட்கள் முடிவடைந்து தற்போது 98 ஆவது நாள் இன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு டிக்கெட் டு ஃபினாலே

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கினால் இது மூன்றும் இருக்காது: லோகேஷ் கனகராஜ்

'மாநகரம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அதன் பின்னர் 'கைதி' என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கினார்