நடிகை எமி ஜாக்சன் திருமணம்.. இத்தாலிக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த தமிழ் இயக்குனர்.!

  • IndiaGlitz, [Tuesday,August 27 2024]

நடிகை எமி ஜாக்சன் இரண்டாவது திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த திருமணத்திற்கு இத்தாலிக்கே நேரில் சென்று தமிழ் இயக்குனர் ஒருவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான ’மதராசபட்டினம்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான எமி ஜாக்சன், அதன் பின் ரஜினிகாந்த் நடித்த ’2.0’ விஜய் நடித்த ’தெறி’ தனுஷ் நடித்த ‘தங்கமகன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்

இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட எமி ஜாக்சன் அதன்பின் சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக எட் வெஸ்ட்விக் என்பவரை எமி ஜாக்சன் காதலித்து வந்த நிலையில் நேற்று இவர்களது இத்தாலியில் திருமணம் நடந்தது என்பதும் இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் ஆனது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த திருமணத்திற்கு தமிழ் திரையுலகில் எமி ஜாக்சனை அறிமுகம் செய்த இயக்குனர் ஏஎல் விஜய் இத்தாலிக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் பகிர்ந்துள்ள வாழ்த்து செய்திகள் ’அன்புள்ள எமி, எட், உங்கள் அழகான திருமணத்திற்கு வாழ்த்துக்கள். அற்புதமான இரண்டு இதயங்கள் ஒன்றிணைந்த இந்த திருமணத்தில் கலந்து கொண்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும், இருவரும் ஒன்றாக இணைந்து வாழும் அற்புத வாழ்க்கை இன்று முதல் தொடங்கியுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

காமெடி நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்தவரும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கலந்து கொண்டவருமான பிஜிலி ரமேஷ் சற்றுமுன் காலமானதாக வெளியாகியிருக்கும்

வாயே திறக்காத எம்.எஸ்.வி., வார்த்தைகளை விடும் ராஜா, ஆம் ராஜாவின் இசையில்தான் உயிர் வாழ்கிறோம், கங்கை அமரனின் கல கல... பேட்டி

இந்திய இசை உலகின் அரசனாக கொண்டாடப்படும் இளையராஜாவின் தம்பி கங்கை அமரன். கங்கை அமரன் தமிழ்த் திரைப்பட உலகில் ஓர் இசை அமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும்,

பைஜாமாவில் இரத்தம், சிதறிய விரல்களை நெஞ்சில் வைத்து கண்ணீர் விட்ட MGR

விஸ்வநாதன் , ராமமூர்த்தி என்ற இரட்டை ஜாம்பவான்களுக்கு அடுத்து தமிழ் திரைத்துறையில் முத்திரை பதித்தவர்கள் சங்கர் கணேஷ் ஆவர். அவர்களின் ஆளுமை நிறைந்த இசைத்துறையில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

ஆகஸ்ட் 30ஆம் தேதி ஒரு சம்பவம் இருக்கு: ப்ரியா அட்லியின் பதிவால் பரபரப்பு..!

ஆகஸ்ட் 30ஆம் தேதி ஒரு புதிய அறிவிப்பை வெளியிடப் போவதாக ப்ரியா அட்லி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்யை அரசியல் கட்சி ஆரம்பிக்க சொன்னதே ராகுல் காந்தி தான்.. அரசியல்வாதியின் புதிய தகவல்..!

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவரை அரசியல் கட்சி தொடங்க சொன்னது ராகுல் காந்தி தான்